அஜித் மகனாக நடிக்கும் ரூ.100 கோடி வசூல் படம் கொடுத்த நடிகர்.. 'குட் பேட் அக்லி'யின் சூப்பர் தகவல்..!

  • IndiaGlitz, [Friday,June 07 2024]

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் ஜப்பான் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் தவிர மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் ‘பிரேமலு’ படத்தில் நாயகனாக நடித்த நஸ்லின் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்தது. இந்த நிலையில் தற்போது இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதோடு இந்த படத்தில் அஜித் மகனாக நஸ்லின் நடிக்க இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்து சில மாதங்களுக்கு முன் வெளியான ’பிரேமலு’ திரைப்படத்தில் நஸ்லின் மற்றும் மமிதா பாஜூ நத்திருந்த நிலையில் அந்த படம் தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பிரேமலு’ வெற்றி தான் நஸ்லினுக்கு அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் அதுவும் அஜித்தின் மகனாகவே நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித்தை அடுத்து சிரஞ்சீவியை சந்தித்த ஷாலினி - ஷாம்லி.. 24 வருடங்களுக்கு முன் நடந்த மேஜிக்..!

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அஜித் சந்தித்தார் என்பதும், இருவரது படங்களின் படப்பிடிப்புகள் ஒரே இடத்தில் நடந்த போது இந்த சந்திப்பு

சின்ன முருகன் வைபவ் மகேஷ்: முருக பக்தி பரவசம்!

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இனிமையான வீடியோ ஒன்றில், சிறுவன் வைபவ் மகேஷ் அவர்கள், முருகன் பக்தி பாடல்களையும் கதைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நீட் தேர்வால் வரும் பிரச்சனைக்கு குரல் கொடுத்த வாணி போஜன்.

வீரம் மிக்க அரசியல் பெண்ணாக நடித்து அசத்தினார்.இதற்கு முன்பு பார்த்ததை காட்டிலும் ஒரு புதிதான அரசியல் விவாதம் மற்றும் ஒரு திறம்மிக்க பெண்ணாக நடித்தது உண்மையிலே அனைவரையும் ஈர்த்தது.

நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர்.. விமான நிலையத்தில் பரபரப்பு..!

நடிகை கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே ஒரு இமெயில்.. 'எதிர்நீச்சல்' சீரியலுக்கு எண்ட்கார்டு போட்ட இயக்குனர் திருச்செல்வம்..!

'எதிர்நீச்சல்' சீரியல் இயக்குனர் திருச்செல்வனுக்கு ஒரே ஒரு இமெயில் வந்ததாகவும் அதனை அடுத்து அவர் உடனடியாக அந்த சீரியலை முடிக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.