தனுஷின் அடுத்த பட வில்லனுக்கு ரூ.10 கோடி சம்பளமா? ஆச்சரியத்தில் கோலிவுட்!

தனுஷின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் வில்லனுக்கு ரூபாய் 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய இளம் தலைமுறை இயக்குனர்கள் ஹீரோவுக்கு இணையாக வலிமையான வில்லன் கேரக்டர் அமைக்க வேண்டும் என்றும் மேலும் வில்லன் கேரக்டரில் பிரபல நடிகர்களை நடிக்க வைக்க வேண்டும் என்பதையும் புரிந்து வைத்துள்ளனர். எனவே தான் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படங்களில் பிரபல ஹீரோக்கள் வில்லன்களாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ரூபாய் 10 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக இருக்கும் தமிழ் தெலுங்கு திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வுகள் நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோவுக்கு இணையான வலிமையான வில்லன் கேரக்டரில் நடிக்க சஞ்சய் தத் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தளபதி 67’ படத்தில் வில்லனாக சஞ்சய்தத் நடிக்க உள்ளார் என்பதை அடுத்து தற்போது தனுஷின் அடுத்த படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.