close
Choose your channels

ரூ.250 கோடி நஷ்டம்.. 7 மாடி கட்டிடத்தை விற்பனை செய்த 'இந்தியன் 2' நடிகையின் கணவர்..!

Tuesday, June 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’இந்தியன் 2’ படத்தில் நடித்த நடிகையின் கணவர் ரூபாய் 250 கோடி சினிமா தயாரிப்பு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மும்பையில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடித்துள்ள ’இந்தியன் 2’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்த ரகுல் ப்ரீத் சிங். இவர் இந்த ஆண்டு பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங் கணவர் ஜாக்கி பக்னானி தயாரித்த சில படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியதன் காரணமாக அவர் தனக்கு சொந்தமான மும்பையின் மையப்பகுதியில் இருந்த ஏழு மாடி கட்டிடத்தை விற்பனை செய்துவிட்டு ஊழியர்களையும் 80% பேரை வீட்டுக்கு அனுப்பி விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து தன்னுடைய அலுவலகத்தை மும்பையின் வேறொரு பகுதியில் இரண்டு படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு மாற்றி உள்ளதாக தெரிகிறது.

ரகுல் ப்ரீத்தி சிங் கணவர் ஜாக்கி பக்னானியின் பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் கோவிந்தா நடித்த ‘கூலி நம்பர் 1’, ‘ஹீரோ நம்பர் 1’, சல்மான் கான் நடித்த ‘பீவி நம்பர் 1’, அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவான ‘பெல்பாட்டம்’, டைகர் ஷெராஃப், அமிதாப்பச்சன் நடித்த ‘கண்பத்’, அக்‌ஷய் குமார் நடித்த ‘படே மியான் சோட்டே மியான்’ ஆகிய படங்களை தயாரித்த நிலையில் இவற்றில் சில படங்களால் கடும் நஷ்டம் ஏற்பட்டது. குறிப்பாக ரூ.350 கோடி செலவில் உருவான ‘படேமியான் சோட்டே மியான்’ திரைப்படத்தின் மொத்த வசூல் வெறும் ரூ.59.17 கோடியை என்பதால் ஜாக்கி பக்னானிக்கு கடன் அதிகமானது என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.