close
Choose your channels

கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ரூ.50,000 இழப்பீடு… தமிழக அரசு விளக்கம்!

Tuesday, November 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும்படி உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் நிவாரணத்தொகை எப்போது வழங்கப்படும் எனக் கேட்டு சிலர் பொதுநல வழக்குத் தொடுத்திருந்தனர். இந்த வழக்கில் ஆஜராகி பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநில அரசு ஏற்றுக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் இதுவரை 36,220 பேர் கொரோனாவால் மரணம் அடைந்திருப்பதாகவும் அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் விளக்கம் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள் இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் பிற மாநிலங்களில் கூடுதல் இழப்பீடு வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கூடுதலாக இழப்பீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment