மிக அதிக தொகைக்கு இன்சூர் செய்யப்பட்ட ரஜினி படம்

  • IndiaGlitz, [Sunday,February 26 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகாவின் மிக அதிகமான பொருட்செலவில் உருவாகி வரும் படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான '2.0'.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் தற்போது ரூ.350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தியாவிலேயே மிக அதிகமான தொகைக்கு இன்சூர் செய்யப்பட்ட படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் அமீர்கானின் 'பிகே' ரூ.300 கோடிக்கும், ரஜினியின் 'எந்திரன்' திரைப்படம் ரூ.100 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.350 கோடிக்க்கும் '2.0' இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி-லதா தம்பதிக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் லதா அவர்களும் 36 வருடங்களுக்கு முன் அதாவது கடந்த 1981ஆம் ஆண்டு இல்வாழ்க்கையில் இணைந்த நாள் இன்று. சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது ஒரு ரசிகையாக கல்லூரி இதழ் ஒன்றுக்காக ரஜினியை பேட்டியெடுக்க சென்ற லதா, அவரிடம் மனதை பறிகொடுத்து பின்னர் வாழ்க்கையிலும் இணைந்த நாள் இன்று...

ஜெ.குறித்த சர்ச்சை கருத்து கூறியது ஏன்? கைதான ராமசீதா பரபரப்பு வாக்குமூலம்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ராமசீதா என்பவர் தன்னை அப்பல்லோ டாக்டர் என்று அறிமுகம் செய்து ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோதே பிணமாகத்தான் கொண்டு வந்தார்கள் என்றும், தான் அந்த மருத்துவமனையில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் பரபரப்பு தகவலை கூறினார்...

ஜல்லிக்கட்டு, தமிழக அரசியலை அடுத்து கமலின் அடுத்த பார்வை

கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசனின் சமூக வலைத்தள பக்கம் சூடான கருத்துக்களை தெரிவித்து வருகிறது. இதனால் அவருடைய பக்கத்தின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை எகிறி வருகிறது...

கருணாசுக்கு திருவாடனை தொகுதி மக்கள் தெரிவித்த எதிர்ப்பு.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ஆட்சி பொறுப்பை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள போதிலும் மதில் மேல் பூனையாகத்தான் ஆட்சியின் நிலை உள்ளது. 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் தற்போது 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அரசுக்கு உள்ளது. 5 எம்.எல்.ஏக்கள் தடம் மாறிவிட்டால் ஆட்சி அம்போதான்...

வைக்கம் விஜயலட்சுமியின் திருமணம் திடீர் ரத்துக்கான காரணம். அதிர்ச்சி தகவல்

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கும் சந்தோஷ் அவர்களுக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இவ்வருடம் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இந்த திருமணம் திடீரென நின்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...