பெரும் இழப்பு… சோகத்தில் மூழ்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ… ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஏற்பட்ட பெரும் சோகம் காரணமாக அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஏற்கனவே ஜுனியர் ரொனால்டோ, மேடியா என்று இரு மகன்களும் ஈவா, அலனா என்று 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்டியானோவின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் மீண்டும் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் அதனால் தாங்கள் இரட்டைக் குழந்தைகளை வரவேற்க இருப்பதாகவும் கடந்த அக்டோபர் மாதம் கூட்டாக இருவரும் சமூகவலைத்தளங்களில் தகவல் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து கிறிஸ்டியானோ மற்றும் ரோட்ரிக்ஸின் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைக் கூறிவந்தனர்.

இந்நிலையில் தற்போது தங்களுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தை இறந்துவிட்டதாகவும் பெண் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் ரொனால்டோ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இரட்டைக் குழந்தை பிறந்தது, அதில் ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டது, பெண் குழந்தை நலமுடன் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

மேலும் எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலியைத் தற்போது உணர்ந்துள்ளேன் என்றும் பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்தத் தருணத்தில் ஓரளவு நம்பிக்கையுடன் வாழ வலிமை அளிக்கிறது என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். தொடர்ந்து தனது மனைவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி கூறிய அவர் இந்த இழப்பினால் பெரும் கஷ்டத்தில் இருக்கிறோம். எனவே இந்தக் கடினமான நேரத்தில் தனிமையை விரும்புவதாக ரொனால்டோ மற்றும் ரோட்ரிக்ஸ் ஆகியோர் கூட்டாக கையொப்பமிட்ட அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.

இதையடுத்து கர்ப்பத்திலும் கலையாத ரொனால்டோ தற்போது கலங்கி நிற்பதாகக் கூறிய அவருடைய ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

More News

எலான் மஸ்க்கிற்கு சொந்தமாக வீடுகூட இல்லையா? பரபரப்பைக் கிளப்பும் புதுத் தகவல்!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க்

'அயலான்' ஒரு பான் - இந்தியா படமல்ல, பான் - வேர்ல்ட் படம்: சொன்னது யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும் திரைப்படம் 'அயலான்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

ஒரு சூரியன், ஒரு சந்திரன்: மோடி-அம்பேத்கர் ஒப்பீடு குறித்து கேப்டன் விஜயகாந்த்!

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது குறித்து தனது

ரஜினிக்கு விமானம், கமலுக்கு ரயில்: வேற லெவலில் 'விக்ரம்' புரமோஷன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்திற்கு விமானத்தில் புரமோஷன் செய்யப்பட்ட நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்திற்கு ரயிலில் புரமோஷன் செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.

காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்துவிட்டதா? சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து!

நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் ரசிகர்கள் காஜல் அகர்வாலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்