டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் விலகல்? அதிர்ச்சியான ரசிகர்கள்!

வரும் 2023 உலகக்கோப்பை போட்டியை கருத்தில்கொண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவை பிசிசிஐ சமீபத்தில் நியமித்தது. இதையடுத்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு இனி இந்திய அணியை ரோஹித் சர்மாவே வழிநடத்துவார் என்றும் அவர்மீது பிசிசிஐ முழு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றன.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்றும் இவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் ஒப்பனராக இறங்குவார் என்றும் பரபரப்பு தகவல்கள் கூறப்படுகின்றன. காரணம் பயிற்சியின்போது மும்பையில் தங்கியிருக்கும் ரோஹித் சர்மாவிற்கு கையில் காயம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து ஸ்கேன் செய்தபோது ஒருவாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்காக இந்திய வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் பயோபபுள் முறையில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து வரும் டிசம்பர் 16 ஆம் தேதி அவர்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு செல்லவுள்ளனர். அங்கு டிசம்பர் 26ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் துவங்கவுள்ளன. முன்னதாக இந்த டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டன்சியில் 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இந்த டீமில் ஓப்பனராக இருந்துவந்த ரோஹித் சர்மா தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக பிரியங்க் பஞ்சல் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஏ அணியில் இடம்பெற்றுள்ள இறுதிப்போட்டியில் 96 ரன்களை குவித்து இருந்தார். மேலும் உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்களை குவித்து அதிரடி காட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ரோஹித் சர்மாவிற்க பதிலாக பிரியங்க் பஞ்சல் களம் இறக்கப்பட்டு உள்ளார். ஆனால் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடுவாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

More News

'ஜெய்பீம்' படத்தில் சூர்யா கேரக்டரில் நடிக்கவிருந்தவர் இந்த பிரபல நடிகரா?

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ஒருசில அமைப்புகள் மற்றும் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தாலும் ஒட்டு மொத்த ரசிகர்கள் மற்றும்

முடிவடையும் நிலையில் 'விருமன்' படப்பிடிப்பு: கார்த்தியின் அடுத்த திட்டம் என்ன?

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் 'விருமன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

'சர்வைவர்' விஜயலட்சுமி வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்: நெட்டிசன்களின் வேற லெவல் கமெண்ட்ஸ்!

ஜீ டிவியில் ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஞாயிறன்று நிறைவு பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை நடிகை விஜயலட்சுமி

இனி ஆண்களும் சமைக்கனும்… திட்டத்தை வரவேற்ற பிரபல பெண் தயாரிப்பாளர்!

பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்களுக்கும்

வயதில் மகள்போல மாறிய தாய்… அலப்பறை செய்து வசமா மாட்டிக்கொண்ட சம்பவம்!

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் 48 வயதான பெண் ஒருவர் தனது 22 வயது மகள் போலவே தன்னைக் காட்டிக்கொண்டதோடு