எந்த நடிகையும் தைரியமாக புகார் கூறலாம்: நடிகர் சங்க கூட்டத்தில் ரோகிணி..!

  • IndiaGlitz, [Sunday,September 08 2024]

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் யாராக இருந்தாலும் தைரியமாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ரோகிணி பேசியுள்ளார்.

நடிகைகள் பாலியல் புகார் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பாக கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பின்னர் பல பெரிய நட்சத்திரங்களை மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இதில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் புகார் அளிக்கலாம் உள்பட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின் நடிகை ரோகிணி பேசியபோது ’2019 ஆம் ஆண்டில் தென்னிந்திய திரையுலகில் இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டது, நடிகர் நடிகைகள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் இந்த கமிட்டியில் புகார் அளிக்கலாம், வழக்கறிஞர்கள், என்.ஜி.ஓக்கள் உள்பட பலர் உள்ள இந்த கமிட்டியில் இருப்பதால், புகார் தெரிவித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும், புகாருக்கு உள்ளான நபர் ஐந்து ஆண்டுகள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் புகார் கொடுத்த நபரின் பெயர் வெளியே தெரிவிக்கப்படாது என்றும் எனவே எந்த நடிகையாக இருந்தாலும் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நடிகை மீதான புகார் பெரிதுபடுத்தப்படுகிறது என்றும் நடிகை கூறும் புகார் மட்டும் திரும்பத் திரும்ப ஊடகங்களில் பேசப்படுகிறது என்றும் எல்லா துறையிலும் பாலியல் அத்துமீறல் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறுகையில் ’பொதுக்குழு முன்பாக இருந்த சவால்களை மீறி பொதுக்குழு கூட்டம் நடந்துள்ளது என்றும் மகிழ்ச்சியாக நடந்த இந்த கூட்டத்தில் 10 நாடகக் கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டதாகவும் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 

More News

திருடன் கேரக்டருக்கு நேதாஜி பெயரா? 'கோட்' படத்திற்கு பாஜக பிரபலம் கண்டனம்..!

'கோட்' திரைப்படத்தில் இடம்பெற்ற திருடன் கேரக்டருக்கு நேதாஜி பெயர் வைப்பதா என கண்டனம் தெரிவித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் என்பவர் கண்டனம் தெரிவித்துள்ளார்

'வேட்டையன்' பாடலை பாடியவர் இவர் தான்.. அசத்தல் அனிருத்.. புரமோ வீடியோ ரிலீஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த பாடலை மறைந்த பழம்பெரும் பாடகர் ஒருவர் பாடி இருப்பதாக

'இந்திரா' தொடரில் நடிக்கும் பிரபல நடிகைக்கு திருமணம்.. மணக்கோல புகைப்படங்கள் வைரல்..!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'இந்திரா' என்ற சீரியலில் நடித்த நடிகைக்கு திருமணமானதை அடுத்து மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் சீரியல்.. கிளைமாக்ஸ் படப்பிடிப்பின் நெகிழ்ச்சியான வீடியோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான முக்கிய சீரியல் முடிவுக்கு வருவதை அடுத்து அந்த சீரியலின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பின் போது அதில் நடித்த நட்சத்திரங்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து

நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க உதவி செய்யும் ரஜினி, கமல் :  கார்த்தி தகவல்

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த பொதுக்குழுவில் நடிகர் கார்த்தி கணக்கு வழக்குகளை சமர்ப்பித்து பொதுக்குழுவில் பேசினார்.