ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகி திடீர் நீக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் நிலையில் அவர் தற்போது ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி அதற்கு மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். இந்த அமைப்பு தான் விரைவில் அரசியல் கட்சியாக மாறவிருப்பதாகவும், அதன் நிர்வாகிகள் அப்படியே கட்சி நிர்வாகிகளாக மாறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ரஜினி மக்கள் மன்றத்தின் காஞ்சிபுரம்‌ மாவட்ட துணை செயலாளர்‌ ராஜமூர்த்தி மற்றும் காஞ்சிபுரம்‌ மாவட்ட செயற்குழு உறுப்பினர்‌ கமலக்கண்ணன் ஆகியோர் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரஜினி மக்கள்‌ மன்ற வளர்ச்சி பணிகளில்‌ கவனம்‌ செலுத்‌தி மன்றத்தை வளர்க்காமல்‌, மன்றத்‌தின்‌ ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும்‌ செயல்களில்‌ ஈடுபட்ட காரணத்தினால்‌ காஞ்சிபுரம்‌ மாவட்ட துணை
செயலாளர்‌ ராஜமூர்த்தி அவர்கள்‌ (ஏற்கெனவே மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுவினால்‌ 7-9-2018 ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்‌) காஞ்சிபுரம்‌ மாவட்ட செயற்குழு உறுப்பினர்‌ கமலக்கண்ணன்‌ ஆகியோர்கள்‌ மன்ற பொறுப்புகளில்‌ இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள்‌.

மேற்கண்ட இருவரும்‌ எவ்வித மன்ற பணிகளிலும்‌ ஈடுபடக்‌ கூடாது எனவும்‌, இனி வரும்‌ காலங்களில்‌ இவர்களது நடவடிக்கைகளை மாநில தலைமை கூர்ந்து கவனித்து, அவர்களது செயல்பாட்டினை கருத்‌தில் கொண்டு மீண்டும்‌ பொறுப்பு வழங்குவது குறித்து பரிசீலினை செய்யப்படும்‌.

ரஜினி மக்கள்‌ மன்ற நிர்வாகிகளும்‌, உறுப்பினர்களும்‌ மேற்கண்ட இருவரிடம்‌ எந்த வித தொடர்பும்‌ வைத்துக்கொள்ள கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. மீறி செயல்படுபவர்கள்‌ மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

இந்தியா எப்பவும் டாப்புதான் … புகழ்ந்து தள்ளும் இங்கிலாந்து இளவரசர்!!! காரணம் தெரியுமா???

இந்தியாவிடம் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்த தெளிவான புரிதல்கள் எப்போதும் இருக்கிறது என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

நான் பயங்கரக் கடுப்பில் இருக்கிறேன் - இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் கருத்து !!! விஷயம் என்னனு தெரியுமா???

இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டிஸ் அணிக்ககும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் முதல் டெஸ்ட் போட்டி ஜுலை 8 ஆம் தேதி தொடங்கியது

அப்பா, அம்மா, கணவர்: பிரபல நடிகையின் குடும்பத்திற்கே கொரோனா!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இதுவரை இந்தியாவில் பேர் 8.21 லட்சம் பேர்கள் கொரோனாவால்

காதலிக்காக ஒன்று, பெற்றோருக்காக ஒன்று: ஒரே நேரத்தில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலிக்காக ஒரு திருமணமும் பெற்றோருக்காக ஒரு திருமணமும் என ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

காருக்குள் தலையை நுழைத்து இருமிய கிராம மக்கள்: பரிசோதனை செய்ய வந்த மருத்துவர்கள் அதிர்ச்சி

கொரோனா பரிசோதனை செய்ய வந்த மருத்துவர்களின் காருக்குள் தலையை விட்டு வேண்டும் என்றே இருமி, கொரோனாவை பரப்ப முயன்ற கிராம மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது