பெப்சி தொழிலாளர்களுக்கு 100 மூட்டை அரிசி கொடுத்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Wednesday,March 25 2020]

கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் திரைப்பட படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்களான பெப்சி தொழிலாளர்கள் கடும் கஷ்டத்தில் இருப்பதாகவும் வருமானமின்றி குடும்பத்தோடு பசியில் இருக்கும் அந்த தொழிலாளர்களுக்கு நடிகர் நடிகைகள் உதவ வேண்டுமென ஆர்கே செல்வமணி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை அடுத்து இலட்சக்கணக்கில் பணம், அரிசி மூட்டைகள் பெப்ஸி தொழிலாளர்களுக்கான குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவும் ஆர்கே செல்வமணியின் மனைவியுமான ரோஜா, 100 மூட்டைகள் அரிசியை பெப்சி தொழிலாளர்களுக்காக கொடுத்துள்ளார்.

இது குறித்து ரோஜா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: கொரோனா என்ற வைரசால் வேலையின்றி பாதிக்கப்பட்ட பெப்சி தொழிலாளர்களுக்கு நூறு மூட்டை அரிசியை நான் கொடுக்கப் போகிறேன். ஆனால் இது ஒரு பெரிய விஷயமல்ல. நீங்கள் செய்யவேண்டியது குடும்பத்தோடு வீட்டுக்குள்ளே இருந்து விலகி இருங்கள். ஏனெனில் 40 வருடமாக நீங்கள் இரவு பகலாக கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள். கெட்டதிலும் ஒரு நல்லது. கடவுள் நமக்கு கொடுத்த இந்த விடுமுறையை குடும்பத்தோடு செலவழியுங்கள். நீங்கள் வீட்டில் இருப்பதே சமுதாயத்திற்கு செய்கிற பெரிய உதவி. வீட்டிலேயே இருங்கள் என்று அவர் நடிகை ரோஜா குறிப்பிட்டுள்ளார்.

More News

'தல' வீட்ல இருக்காரு, நீங்களும் வீட்ல இருங்க: திமுக எம்.எல்.ஏ வேண்டுகோள்

கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து, தங்களை தாங்களே வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்வது

ஊரடங்கு உத்தரவிற்கு பின்னரும் டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்: அதிர்ச்சி தகவல்

உலகமெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வரும் நிலையில் இந்தியாவிலும் சுமார் 500 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி விட்டது.

வாயில்லா ஜீவன்களையும் காப்பாற்றுங்கள்: பிரபல நடிகை வேண்டுகோள்

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளவும் நேற்று நடிகை வரலட்சுமி ஒரு வீடியோ பதிவு செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

கொரோனாவில் இருந்து தப்பிக்க எஸ்வி சேகர் கூறிய ஐடியா

கொரோனா வைரஸ் உலகில் உள்ள மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் உலக நாடுகளின் அரசுகள் திணறி வருகின்றன

போலீசாருக்கே வாளை காட்டி எச்சரித்த பெண் சாமியார்: போலீஸ் எடுத்த நடவடிக்கை

கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி மக்களை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வைப்பது ஒன்றுதான்.