கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகளை சம்பந்தப்படுத்திய விவகாரம்..ஆர்கே செல்வமணி அறிக்கை..!

  • IndiaGlitz, [Tuesday,February 20 2024]

கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகளை சம்பந்தப்படுத்தி பேசிய முன்னாள் அதிமுக பிரமுகருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி இது குறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்றைய சமூக வலைதளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட திரு.A.V.ராஜீ என்பவர் திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை த்ரிஷா அவர்களை சம்பந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் திரு.கருணாஸ் அவர்களையும் சம்மந்தப்படுத்தி இந்த கீழ்த்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, கீழ்த்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். செயலை, இத்தகைய அநாகரிகமான கீழ்த்தரமான செயலை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம்.

பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசு தலைவராக திருமதி.முர்மு அவர்கள் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் ”பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்” நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்பு கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இவ்வாறு பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

ஓடிடி விஷயத்தில் முக்கிய முடிவெடுத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..!

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி அளித்துள்ளார்,

பாடலாசிரியர் சினேகன் அளித்த புகார்.. தமிழ் நடிகை அதிரடி கைது..!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் நடிகை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஷ்பு ஏன் அமைதியாக இருக்கிறார்? கூவத்தூர் விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் கேள்வி..!

அதிமுகவில் இருந்து விலகிய ராஜு என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் திரையுலகை சேர்ந்த

கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது: த்ரிஷாவின் பதிவு..!

கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது என்று நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கோலிவுட்டில் ஒரு புதிய 'ஸ்டார்' நடிகை..  மேகா ஷெட்டிக்கு குவியும் ஆதரவு..!

தனது நேர்த்தியான வசீகரத்தாலும் பன்முகத் திறனாலும் பார்வையாளர்களைக் கவரும் திறன் கொண்ட நடிகைகள் மிகக் குறைவு. அப்படியான நடிகைகள் திரையில் பார்வையாளர்கள் எளிதில் தங்களுடன்