ஆர்.கே.நகரை விட்டு ஓட்டமெடுக்கும் பொதுமக்கள்: அரசியல்வாதிகள் பயமுறுத்தலா?

  • IndiaGlitz, [Friday,December 22 2017]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேற்று நடைபெற்று முடிவடைந்த நிலையில் வரும் 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்த நிலையில் இந்த தேர்தலில் இரண்டு பெரிய அரசியல் வேட்பாளர்களும், ஒரு சுயேட்சை வேட்பாளரும் வாக்காளருக்கு பணத்தை தண்ணியாக இறைத்தது தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்பட அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும்போதே தங்களுக்குத்தான் ஓட்டு போட வேண்டும் சத்தியம் வாங்கியதாக கூறிய அரசியல் கட்சிகளின் ஆட்கள், நேற்றிரவே வீட்டு வீடுக்கு சென்று அவர்கள் கையில் உள்ள மையை வைத்து அவர்கள் ஓட்டு போட்டார்களா? என்று சோதனை செய்ததாகவும், ஓட்டு போடாதவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டதாகவும் தெரிகிறது. பணம் இல்லை என்று சொன்னவர்களிடம் நாளைக்குள் பணத்தை திருப்பி தரவேண்டும் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டு போடாதவர்கள் வீட்டை பூட்டிவிட்டு ஆர்.கே.நகரை விட்டு வெளீயேறியதாகவும் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அவர்கள் திரும்ப முடிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் இன்று ஆர்.கே.நகரில் உள்ள பல வீடுகள் பூட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது.

More News

அஜித், விஜய், சூர்யாவை முந்திய ஏ.ஆர்.ரஹ்மான்

உலகப்புகழ் பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2017ஆம் ஆண்டின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியல் ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

போன வாரம் 'அருவி', இந்த வாரம் 'அறிவு': உறவுக்காரர்கள் பெற்ற வெற்றிகள்

கடந்த வாரம் வெளியான 'அருவி' சூப்பர் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இன்று இரண்டு புதிய படங்கள் வெளியான போதிலும் 'அருவி' படம் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதில் இருந்தே இந்த படத்திற்கு

விக்ரமின் 'சாமி 2': மீண்டும் போலீஸ் கேரக்டரில் பிரபல நடிகை

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள சாமி' படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. விஷால் நேரில் ஆஜர்

நடிகர் ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சற்றுமுன்னர் நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் ஆஜரானார். நீதிமன்றத்தில் உறுதி அளித்ததற்கு மாறாக தன்னை நடிகர் சங்க பொதுக்குழுவில்

குமரி மீனவர்களுக்காக கொடை வள்ளலாக மாறிய ஜி.வி.பிரகாஷ்

சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக அந்த பகுதி மக்கள் குறிப்பாக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர்.