போராட்டக்காரர்களுக்கு கேள்வி எழுப்பிய ஆர்.ஜே.பாலாஜி

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

ஐபிஎல் போட்டிக்கு எதிராக நேற்று சென்னையில் அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மானமுள்ள தமிழர்கள் இந்த போட்டியை பார்க்க செல்லக்கூடாது என்று அரசியல் கட்சியினர் கூறியபோதிலும் நேற்று ஸ்டேடியம் நிரம்பியது. இந்த நிலையில் இந்த போட்டியை வர்ணனை செய்ய கூடாது என்று ஆர்.ஜே பாலாஜிக்கு சிலர் வேண்டுகோள் விடுத்ததால் அவரும் இந்த போட்டியை வர்ணனை செய்ய போவதில்லை என்று அறிவித்தார். அதே நேரத்தில் ஐபிஎல் போட்டிக்கு எதிரான இந்த போராட்டம் சரியா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்

இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் வேறு மாநிலத்திற்கு மாற்றவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது:

ஐபிஎல் போட்டி இனி சென்னையில் இல்லை. இனிமேல் காவிரி மேலாண்மை வாரியம் வந்துடும்ல்ல. காவிரி பிரச்சனையை கிரிக்கெட் பிரச்சனையாக்கி பின்னர் வன்முறை ஆக்கியது ஒன்றுதான் போராட்டக்காரர்களின் சாதனை. இந்த சுயநல போராட்டங்களை எந்த தன்மானம் உள்ள தமிழனும் ஏற்று கொள்ள மாட்டான். போட்டியை நிறுத்தியாகிவிட்டது இனிமேலாவது காவிரி மேலாண்மை வாரியத்தை பெற்று தாருங்கள் முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


 

More News

விமான விபத்தில் 257 ராணுவ வீரர்கள் பலி: அதிர்ச்சி தகவல்

அல்ஜீரியா நாட்டில் நடந்த விமான விபத்து ஒன்றில் அதில் பயணம் செய்த 257 அல்ஜீரிய நாட்டு ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எங்க பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க: பிரபல பாடலாசிர்யரின் கவிதை

காவிரி பிரச்சனையில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். இன்னும் சிலர் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது ஆவேச கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ரயில் மீதேறி போராட்டம் செய்த பாமக தொண்டருக்கு நேர்ந்த பரிதாபம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தால் சிலசமயம் அசம்பாவிதமும் நடந்து வரும்

சென்னை ஐபிஎல் போட்டிகள் திடீர் மாற்றம்: வெற்றியா? தோல்வியா?

சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருந்தது.

காவிரி தாயுடன் பிரபல நடிகர் உரையாடிய கவிதை

காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க  வேண்டும் என்பதற்காக 25 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்கு பின் கிடைத்த தீர்ப்பையும் மத்திய அரசு அமல்படுத்தவில்லை