பாலாஜியை அடுத்து ரித்விகா மீது குப்பை கொட்டும் போட்டியாளர்கள்

  • IndiaGlitz, [Wednesday,September 26 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராணி மகாராணி டாஸ்க்கின்போது பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டிய விவகாரம் இன்றளவும் ஒரு வாதமாக பேசப்பட்டு வருகிறது. கடும் கோபக்காரரான பாலாஜி, ஐஸ்வர்யா குப்பையை கொட்டியபோது அமைதியாக இருந்தது ஆச்சரியம் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவை ஏன் யாரும் தடுக்கவில்லை என நித்யா சமீபத்தில் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் குப்பை கொட்டுதல் உள்பட ஒருசில சம்பவங்களை போட்டியாளர்கள் நடித்து காட்டுகின்றனர். அதில் ரித்விகா, பாலாஜி போல் நடிக்க அவர் மீது மற்றவர்கள் போட்டி போட்டு குப்பையை கொட்டுகின்றனர். அதேபோல் மும்தாஜ் போல் விஜயலட்சுமி நடிக்க ஐஸ்வர்யா, ரித்விகா போல் நடிக்கும் ஒரு காட்சியும் நடித்து காட்டப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ரித்விகாவிற்கு 77 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளும், ஐஸ்வர்யாவுக்கு 43 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளும் கிடைத்துள்ளது. விஜயலட்சுமிக்கு சுமார் 22 லட்சமும், ஜனனிக்கு சுமார் 19 லட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளது.

More News

'சர்கார்' படத்துடன் வெளியாகும் சூப்பர் ஸ்டார்களின் படம்

தீபாவளி தினத்தில் தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதே தினத்தில் வேறு சில திரைப்படங்களும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

'சர்கார்' படத்தின் பாடலை எழுதினாரா காமெடி நடிகர் விவேக்?

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் சிமிட்டங்காரன்' பாடல் சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில்

ஐஸ்வர்யாவை குஷிப்படுத்த பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று 100வது நாளை எட்டிவிட்ட நிலையில் இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை பதிவான வாக்குகளின்படி ரித்விகாவிற்கு 60 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திமுகவில் தனக்கு எந்த இடம்: உதயநிதி விளக்கம்

நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'திமுக ஒரு கட்சி அல்ல என்றும், அது ஒரு கம்பெனி என்றும், அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டன் கூட தலைமை பொறுப்பை ஏற்கலாம்

சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பு 'மோதி விளையாடு பாப்பா'

சிவகார்த்திகேயன் படம் என்றாலே குழந்தைகள் விரும்பும் படம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம்