விஜய்சேதுபதியின் எல்லா படங்களையும் பார்க்க விரும்புகிறேன். பிரபல நடிகை

  • IndiaGlitz, [Wednesday,March 02 2016]


சுதா இயக்கத்தில் மாதவனுடன் 'இறுதிச்சுற்று' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ரித்திகாசிங், தற்போது 'காக்கா முட்டை' பட இயக்குனர் மணிகண்டன் இயக்கும் அடுத்தபடமான 'ஆண்டவன் கட்டளை' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.


இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியது குறித்து ரித்திகாசிங் கூறியபோது, 'நானும் எனது தந்தையும் மும்பையில் இருந்து அதிகாலை 4.30 க்கு கிளம்பி சென்னை வந்து மணிகண்டனை நேரில் சந்தித்து கதை கேட்டோம். அவர் கதை கூறிய விதமும், எனது கேரக்டரும் மிக அருமையாக இருந்தது. உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அன்று இரவே மும்பை திரும்பினோம். இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமான நாள் ஆகும்.

மேலும் விஜய்சேதுபதி குறித்து நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அவரை முதன்முதலில் சந்திக்கும் முன்னர் அவர் நடித்த அனைத்து படங்களையும் பார்க்க விரும்புகிறேன். அவர் நடித்த படங்களின் லிஸ்ட்டை தற்போது எடுத்துள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

More News

பாகுபலி 2' ரிலீஸ் தேதி. அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியாவின் மிக பிரமாண்டமான திரைப்படமான 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இந்தியாவில் மட்டுமின்றி...

ஹாலிவுட்டுக்கு செல்லும் கோலிவுட் நடிகை

பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் இருந்து ஹாலிவுட்டுக்கு செல்லும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி வருகிறது...

சூர்யாவின் '24' டீசர் விமர்சனம்

முதன்முதலாக சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள '24' படத்தின் டீசர் வரும் வெள்ளியன்று மாலை 6 மணிக்கு...

அடுத்த வாரம் முதல் கிக்கை ஏற்றுகிறார் ஜி.வி.பிரகாஷ்

கோலிவுட் திரையுலகில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பாலன்ஸ் செய்து வரும் ஜி.வி,.பிரகாஷ், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படத்திற்கு இசையமைத்து கொண்டே...

ஷங்கரின் '2.0;வில் புகுந்த ராணுவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்திற்காக பலகோடி மதிப்புள்ள பிரமாண்ட...