வெட்கக்கேடு!  இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது.. பிரபல நடிகை ஆவேசம்..

  • IndiaGlitz, [Monday,March 04 2024]

வெட்கக்கேடு! இந்தியர்கள் தங்கள் வீட்டு பெண்களை நடத்துவது போல வெளிநாட்டவர்களை நடத்தி வரும் நிலையில் ஒரு சிலரால் இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது என்று பிரபல நடிகை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் மற்றும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் இரு சக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் சமீபத்தில் அவர்கள் இந்தியா வந்தனர். கடந்த வாரம் அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்ற போது அங்கு சில மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து கொடூரமாக தாக்கியதோடு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மற்றவர்களை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பிரபல நடிகை ரிச்சா சதா கூறியபோது, ‘வெட்கக்கேடு! இந்தியர்கள் தங்கள் வீட்டு பெண்களை நடத்துவது போல வெளிநாட்டவர்களை நடத்தி வரும் நிலையில் ஒருசிலரால் இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது’ என கூறியுள்ளார்.

அதேபோல் நடிகர் துல்கர் சல்மான் இதுகுறித்து கூறிய போது, ‘நீங்கள் இருவரும் எங்கள் கேரளாவுக்கு வந்த போது அங்குள்ள எங்கள் நண்பர்கள் உங்களுக்கு விருந்தளித்தார்கள். ஆனால் பீகார் மாநிலத்தில் உங்களுக்கு நடந்தது போல் வேறு எங்கும் இனிமேல் நடக்க கூடாது’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

பார்லரை வித்தத ஏன் சொல்லலை.. ரோகிணியிடம் முத்து கேட்காத கேள்வியை கேட்கும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் முத்து தனது நண்பர்களுக்காக காரை விற்ற நிலையில் அந்த காரை ஏன் விற்றாய் என ரோகிணி, மனோஜ், விஜயா என மாறி மாறி கேட்க முத்து திருப்பி

ஐஸ்கட்டி தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம்.. 'தெறி' நடிகையின் வைரல் வீடியோ..!

விஜய் நடித்த 'தெறி' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஐஸ் கட்டி தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள

வெள்ளம் நேரத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்த ரசிகர்களுக்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் அதன் பிறகு சில நாட்கள் கழித்து தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மஞ்சுமெல் பாய்சுக்கு கிடைத்த ஆதரவு எனக்கு கிடைக்கலையே.. அதே நாளில் ரிலீசான படத்தின் இயக்குநர் ஆதங்கம்!

மலையாளத் திரைப்படமான 'மஞ்சுமெல் பாய்ஸ்' என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

'குணா' குகையில் கண்டெடுத்ததை 'ஹேராம்' படத்தில் பயன்படுத்தினேன்: கமல்ஹாசன்

'குணா' குகையில் கண்டெடுத்த 3 குரங்கு எலும்புக்கூடுகளை 'ஹேராம்' படத்தில் பயன்படுத்தினேன் என கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.