சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபல நடிகை ஆஜர்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த தற்கொலை குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் சுஷாந்த்சிங் தந்தை பீகார் மாநில போலீசாரிடம் நடிகையும் சுஷாந்த்சிங் காதலியுமான ரியா சக்கரவர்த்தி மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பீகார் மாநில போலீசாரின் பரிந்துரையின்படி தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்று நடத்துகிறது. சிபிஐ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தவுடன் முதல் கட்டமாக ரியா தான் முதல் குற்றவாளி என்று வழக்குப்பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அதாவது இன்று நடிகை ரியா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் நடிகை ரியா தனது வழக்கறிஞருடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் சற்றுமுன் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ரியா மீது சிபிஐ, அமலாக்கப்பிரிவு, காவல்துறை என அடுத்தடுத்து நடவடிக்கை பாய்வதால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

நீங்க வேற லெவல் ப்ரோ: மணிரத்னத்தை கிண்டல் செய்கிறாரா திரெளபதி இயக்குனர்?

சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்பதும் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் தமிழகம்!!! 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து சாதனை!!!

இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் மாநிலமாக தமிழக விளங்குகிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மீண்டும் பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே!!! நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்!!!

கொரோனா பரவலுக்கு இடையிலும் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு நேற்று அதன் முடிவுகளும் அறிவிக்கப் பட்டுள்ளது.

தளபதி விஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த 'பிகில்' நடிகை

'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தளபதி விஜய்யின் பிறந்த நாளன்று அவருக்கு மறக்க முடியாத பரிசு ஒன்று கொடுத்த நடிகை குறித்து தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

அதிபர் ட்ரம்ப்பின் பதிவை அதிரடியாக நீக்கிய பேஸ்புக், டிவிட்டர்!!! காரணம் என்ன தெரியுமா???

அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனமான ஃபாக்ஸ் நியூஸ்க்கு தொலைபேசி வாயிலாக ஒரு பேட்டியை அளித்து இருக்கிறார்.