காலையில் நீதிபதி, மாலையில் மனைவி: ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள்

  • IndiaGlitz, [Saturday,October 06 2018]

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஒரே நாளில் ஓய்வு பெற்ற நீதிபதியும் அவரது மனைவியும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சுதாகர் என்பவர் உடல்நலமின்றி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் காலை 11 மணி அளவில் ரயில்முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவரின் தற்கொலை செய்தியால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி வரலட்சுமி, சிறிது நேரம் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் மாலை 4 மணியளவில் கணவர் தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் அவரது மனைவியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் இருவரது பிணத்தையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட சுதாகர்-வரலட்சுமி தம்பதிகளுக்கு சந்தீப் என்ற மகனும், சவீதா என்ற மகளும் உள்ளனர். இருவரும் பெங்களூரில் சாப்ட்வேர் எஞ்சினியர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.