close
Choose your channels

இன்று முதல் ஆஸ்கர் வின்னரின் மேற்பார்வையில் ரஜினி

Monday, December 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஒருபக்கம் படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த போதிலும் இன்னொரு பக்கம் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதன்படி இன்று முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.0 படத்தின் டப்பிங் பணிகளை தொடங்குகிறார்.

ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டியின் மேற்பார்வையில் ரஜினிகாந்த் டப்பிங் பணியை இன்று முதல் தொடங்குவதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை ரசூல்பூக்குட்டி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.