இன்று முதல் ஆஸ்கர் வின்னரின் மேற்பார்வையில் ரஜினி

  • IndiaGlitz, [Monday,December 26 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஒருபக்கம் படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த போதிலும் இன்னொரு பக்கம் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதன்படி இன்று முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.0 படத்தின் டப்பிங் பணிகளை தொடங்குகிறார்.

ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டியின் மேற்பார்வையில் ரஜினிகாந்த் டப்பிங் பணியை இன்று முதல் தொடங்குவதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை ரசூல்பூக்குட்டி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

More News

அடுத்தடுத்த வாரங்களில் அதிமுக, திமுக பொதுக்குழு கூட்டங்கள்

தமிழகத்தின் இருபெரும் கட்சிகளாக விளங்கி வரும் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் பொதுக்குழு கூட்டங்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை தமன்னாவிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குனர் சுராஜ்

'கத்திச்சண்டை' இயக்குனர் சுராஜ், அளித்த ஒரு வீடியோ பேட்டியில் நடிகைகளின் உடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்து நடிகைகள் மத்தியில் பெரும் கோப அலைகளை ஏற்படுத்தியது.

நயன்தாராவை அடுத்து சுராஜை வெளுத்து வாங்கிய தமன்னா

நடிகைகள் பணத்திற்காக எவ்வளவு கிளாமராகவும் நடிக்க தயங்குவதில்லை என்ற சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய 'கத்திச்சண்டை' இயக்குனர் சுராஜூக்கு நடிகை நயன்தாரா கடும் கண்டனங்கள் தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நயன்தாராவை அடுத்து தற்போது இந்த படத்தின் நாயகியான தமன்னாவும் வெளுத்து வாங்கியுள்ளார்.

பிரபல இயக்குனருக்கு சாட்டையடி பதில் கொடுத்த நயன்தாரா

பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனங்கள் பெற்று திரையரங்குகளில் ஓடி வருகின்றனர்.

இன்று முதல் முழுவேகம் எடுக்கும் ரெய்டுகள். 4 அமைச்சர்களின் மகன்கள் தலைமறைவா?

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் நாடு முழுவதும் ஆங்காங்கே வருமான வரித்துறையினர்கள் சோதனை