இந்தியாவின் இளம் பஞ்சாயத்து தலைவி… மீண்டும் ஒரு அசத்தல் தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,December 31 2020]

 

கேரளாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பல அசத்தலான செயல்கள் நடந்தேறி இருக்கின்றன. இந்தியாவிலேயே முதல் முறையாக 21 வயதில் ஒரு கல்லூரி மாணவி மேயராக அறிவிக்கப்பட்டு இருந்தார். திருவனந்தப்புரத்தின் மேயராகப் பொறுப்பேற்று இருக்கும் 21 வயது ஆர்யா ராஜேந்திரன் அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்து இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் செயல்பட்டு வருவதோடு ஒரு பொறியியல் கல்லூரி மாணவியாகவும் இருந்து வருகிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கேரளாவில் இன்னொரு ஆச்சர்ய சம்பவமும் நடைபெற்று இருக்கிறது. பத்தினம் திட்டம் மாவட்டம் அருவப்புலம் பகுதியின் பஞ்சாயத்து தலைவராக 21 வருடங்களே பூர்த்தியான ஒரு இளம் கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். பி.ஏ இளங்கலை படித்து வரும் கல்லூரி மாணவி ரேஷ்மா மரியம் ராய் கடந்த 1999 ஆம் வருடம் நவம்பர் 18 ஆம் தேதி பிறந்தவர். பத்தினம் திட்டம் மாவட்டத்தின் SFI மாணவர் செயலாளராக பணியாற்றியும் வருகிறார். தற்போது பஞ்சாயத்து தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துக்கு இருக்கும் அம்மாணவி என்னுடைய உயர்படிப்பை நான் தொலைத்தூர கல்வி முறையில் பயின்று கொள்வேன். இப்போதைக்கு சமூக நலன்தான் முக்கியம். என்னுடைய பகுதியில் உள்ள மேம்பாலங்களை சரிசெய்யவேண்டும். அதற்கு கட்சியோடு சேர்ந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார்.

More News

ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை என்ன ஆச்சு?

தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைந்ததை அடுத்து ஜனவரி 31ஆம் தேதி வரை தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் நீடிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

உதவி செய்த நடிகரின் பெயரை பிறந்த குழந்தைக்கு வைத்த தாய்!

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் நடிகர் சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்கள் செய்த உதவி குறித்து அனைவரும் அறிந்ததே.  அவர் செய்த உதவியால் ஏராளமான பொதுமக்கள் அவரை கடவுள் போல்

'ஈஸ்வரன்' ரிலீசுக்கு பிரச்சனையா? தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிம்பு நடித்த 'AAA' படம் குறித்த பிரச்சனை தற்போது எழுந்துள்ளதாகவும்

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களைக் கண்டு அலறும் அதிகாரிகள்… மீன் பிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை!!!

மத்திய அரசு பல வருடங்களுக்கு முன்பாகவே ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களுக்கு தடை விதித்தது.

25 ஆக அதிகரித்த புதியவகை கொரோனா பாதிப்பு… தடுப்பூசி குறித்து எழுந்த சந்தேகம்?

இன்னும் சில தினங்களில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வரும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்து இருந்தார்.