3 நாட்கள் தொடர்ந்து வெளியாகும் செல்வராகவன் பட ஃபர்ஸ்ட்லுக்

  • IndiaGlitz, [Monday,June 20 2016]

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் பேய்ப்படங்கள் வந்த நிலையில் தற்போது பேய்ப்படங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் சிபிராஜின் 'ஜாக்சன் துரை', செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' போன்ற பேய்ப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் செல்வராகவனின் முதல் பேய்ப்படமான 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் பேயாக நடித்துள்ளவர் யார்? என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அவர் வேறு யாருமில்லை, நடிகை ரெஜினாதான்.

இதுவரை இல்லாத அளவில் இந்த பேய்ப்படம் முற்றிலும் வித்தியாசமானது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஈசிஆர் சாலையில் உள்ள பங்களா ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார்.