ரெஜினாவின் முதல் முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

  • IndiaGlitz, [Saturday,May 05 2018]

கார்த்திக், கவுதம் கார்த்திக் முதன்முதலில் இணைந்து நடித்து வரும் 'Mr.சந்திரமெளலி படத்தின் நாயகியாக நடிகை ரெஜினா நடித்து வந்தார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது,

இந்த நிலையில் இந்த படத்திற்காக முதன்முதலில் நடிகை ரெஜினா சொந்தக்குரலில் டப்பிங் பேசியுள்ளார். அவருடைய இந்த முயற்சிக்கு படக்குழுவினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நடிகை ரெஜினாவிற்கு இந்த படம் அவருடைய திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும், இந்த படத்தில் அவர் உச்சகட்ட கவர்ச்சியாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், மிமி கோபி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது

More News

'மன்னன்' விஜயசாந்தி கேரக்டரில் நயன்தாரா?

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கிய 'மன்னன் என்ற வெற்றி படத்தில்  விஜயசாந்தி நடித்த போல்டான கேரக்டர் போன்ற ஒரு கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

தமிழக நீட் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஷால்

நீட் தேர்வு நாளை ஞாயிறன்று நடைபெறவுள்ள நிலையில் தமிழக மாணவர்கள் சிலருக்கு மட்டும் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மகளின் நீட் தேர்வுக்காக கம்மலை அடகு வைத்த தாய்

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைத்தேர்வான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த சில தமிழக மாணவர்களுக்கு கேரளா உள்பட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிக்கு சிறப்பு ரயில், நீட் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இல்லையா?

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு திரையுலகினர் உள்பட பல்வேறு அமைப்பினர்களும், தனிப்பட்ட வகையிலும் பலர் உதவி செய்து வருகின்றனர்.

இந்தியாவில் முதல் முயற்சி எடுக்கும் விஷாலின் 'இரும்புத்திரை

விஷால் நடிப்பில் வரும் 11ஆம் தேதி வெளிவரவுள்ள இரும்புத்திரை' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.