அருள்நிதி அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,July 22 2024]

அருள்நிதி நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அருள்நிதி சரியான கதையை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில் அவர் நடித்த ’டிமான்டி காலனி’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 9 ஆண்டுகள் கழித்து ’டிமாண்டி காலனி 2’ உருவாகியுள்ள நிலையில் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் இந்த படத்தின் மூன்றாம் பாகம், நான்காம் பாகம் உருவாகும் என்று சமீபத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்து பேட்டி அளித்ததால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ’டிமான்டி காலனி 2’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த வீடியோ ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ளது.

அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவும் குமரேஷ் படத்தொகுப்பு பணியும் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.