வீடுதேடி வரும் வங்கி சேவை: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,November 10 2017]

வங்கிகளில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் காசோலைகள் மற்றும் டிடி ஆகியவற்றுக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையில் இவ்வித சேவைகளுக்காக வங்கி அதிகாரிகள் இனி வீடுதேடி வருவார்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் இந்த சலுகை 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், மற்றும் பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

70 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி சென்று வங்கி சேவை அளிக்கும் திட்டத்தை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் செயல்படுத்த அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான வங்கி சேவைகள் அளிக்கப்படாமல் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக கிடைத்த புகார்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் ஒவ்வொரு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் மாதந்தோரும் இலவசமாக 25 காசோலைகள் வழங்க வேண்டும் என்றும், அந்த காசோலைகள் மூலம் பணம் எடுக்கும் போது அவர்கள் நேரில் வரவேண்டும் என வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பால் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

More News

விஜய்சேதுபதிக்கு பிரபல அரசியல் கட்சி தலைவர் பாராட்டு

நடிகர் விஜய்சேதுபதி தனியார் சேமியா நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த ரூ.50 லட்சத்தை அப்படியே கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக விளங்கி வரும் அரியலூர் மாவட்டத்திற்கு நன்கொடை அளித்தார்

கொல்கத்தா பயணம் அரசியல் பயணமா? மம்தாவை சந்தித்த பின் கமல் பேட்டி

உலக நாயகன் கமல்ஹாசன் கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்றார் என்றும், அதனுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கும் திட்டமும் கமலிடம் இருந்ததாகவும்

காதலரை சந்தித்தது எப்போது? திருமணம் குறித்த நமீதாவின் அறிவிப்பு

நடிகை நமீதாவின் திருமணம் குறித்து பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவரான ரைசா வெளியிட்ட வீடியோ குறித்த செய்தியை காலையில் பார்த்தோம். இந்த நிலையில் நடிகை நமீதா தனது திருமணம் குறித்து அறிவித்துள்ளார்.

அறம் திரைவிமர்சனம்

மாபெரும் வெற்றி பெற்ற கத்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று வழக்கிட்ட கோபி நைனார் லேடி சூப்பர்ஸ்டார்...

'மெர்சல்' இயக்குனர் அட்லிக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பை பெற்றது