close
Choose your channels

வங்கிக்கணக்கு-ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை. ஆர்பிஐ

Monday, January 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு எடுத்த முடிவை அடுத்து, வங்கிக்கணக்கில் இருந்தும் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. முதலில் ரூ.2000வரை மட்டுமே ஏடிஎம்களில் இருந்து எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 1 முதல் ரூ.10000 வரை எடுக்க அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடப்பு கணக்கில் இருந்து தினமும் ரூ.1 லட்சம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் இந்த உச்சவரம்பு கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 1 முதல் நடப்பு கணக்கு, சிசி கணக்கு, ஓவர் டிராப்ட் கணக்கு ஆகியவற்றில் இருந்து பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை. அதேபோல் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கவும் இனி கட்டுப்பாடு இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் சேமிப்பு கணக்கில் வைத்துள்ளவர்களுக்கு தற்போதுள்ள கட்டுப்பாடு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சேமிப்பு கணக்கில் இருந்தும் பணம் எடுக்க உச்சவரம்பை தளர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment