தனுஷின் 'நானே வருவேன்' படத்தின் புதிய டைட்டில் இதுதானா? 

  • IndiaGlitz, [Tuesday,July 13 2021]

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் ’நானே வருவேன்’ என்று உறுதி செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் டைட்டில் மாற இருப்பதாகவும் டைட்டில் மட்டுமின்றி கதையும் மாற இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது தனுஷ் - செல்வராகவன் மீண்டும் இணையும் படத்தின் புதிய டைட்டில் ’ராயன்’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது

மேலும் இந்த படம் மூன்று அண்ணன் தம்பிகள் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் ராயபுரத்தில் நடக்கும் கதை என்றும், இதில் மூன்று சகோதரர்களில் ஒருவர் தான் தனுஷ் என்றும் இன்னொரு சகோதரராக நடிக்க விஷ்ணு விஷாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் ஏற்கனவே இந்த திரைப்படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கதை டைட்டில் மற்றும் நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தேதியும் மாற்றப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

’ராயன்’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஆண் நண்பருடன் நீச்சல்குளத்தில் பந்து விளையாடும் விஜய் டிவி சீரியல் நடிகை!

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனது ஆண் நண்பருடன் நீச்சல்குளத்தில் பந்து விளையாடும் வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஒரு வயது குட்டிப்பாப்பாவாக நயன்தாரா: வைரல் புகைப்படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஒரு வயது குட்டிப் பாப்பாவாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

சசிகுமாரின் அடுத்த படம்: இயக்குனர், இசையமைப்பாளர் அறிவிப்பு!

கடந்த 2008ஆம் ஆண்டில் 'சுப்பிரமணியபுரம்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என அறிமுகமானவர் சசிகுமார். அதன்பின்னர் 'நாடோடிகள்' 'போராளி' 'சுந்தரபாண்டியன்' 'நிமிர்ந்து நில்'

மக்கள் அடைந்த கஷ்டத்தால் கண்ணீர் வந்தது....! சுந்தர் பிச்சை உருக்கமான பேச்சு....!

கொரோனா காலத்தில், இந்தியாவில் நடந்தேறிய மக்களின் இறப்பு செய்தி, எனக்கு கண்ணீர் வரவழைத்தது என கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

பண மழையில் நனையும் கிரிக்கெட்டர்கள்! டாப் 10 லிஸ்ட்டில் உள்ள இந்தியர் யார் தெரியுமா?

உலக அளவில் டென்னிஸ் வீரர்களைக் காட்டிலும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் குறைவாகத்தான் வழங்கப் படுகிறது.