ஜாக்கியாகிவிட்ட ரவீந்திர ஜடேஜா… அசத்தலான வீடியோ வைரல்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக அசத்திவரும் ரவீந்திர ஜடேஜா தற்போது குதிரை ஜாக்கியாக மாறியிருக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தென்ஆப்பிரிக்க அணியில் இடம்பெறாத நிலையில் தற்போது குதிரைகளை வைத்து பயிற்சி பெறும் வீடியோ வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் சந்தேகத்தோடு கூடிய உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருந்துவரும் ரவீந்திர ஜடேஜா நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகவுள்ளார் என்பது போன்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

இதை உறுதிப்படுத்தும் விதமாக தென்ஆப்பிரிக்க அணியில் இவருடைய பெயர் இடம்பெறவில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளார் என்பது போன்ற தகவல்கள் கூறப்படுகின்றன. இன்னொரு பக்கம் காயம் காரணமாக விலகியிருக்கும் ஜடேஜா அறுவைசிகிச்சை செய்துகொண்டு தன்னுடைய உடற்தகுதியை விரைவில் நிரூபித்து காட்டுவார்.

இதனால் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என்றும் விரைவில் இந்திய அணிக்கு அவர் திரும்பி வருவார் என்றும் கூறப்படுகின்றன. இந்நிலையில் ஜாம்நகரில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் குதிரைகளை வைத்து பயிற்சி எடுத்துவருகிறார். இதுகுறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

33 வயதாகும் ஜடேஜா இந்திய அணிக்காக 57 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியல் விளையாடியுள்ளார். இதில் 17 அரைச்சதம் மற்றும் 2,195 ரன்களை குவித்து இருக்கிறார். அதேபோல பவுலிங்கில் 232 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

5 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யாவின் அடுத்த திரைப்படம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஜாமீன்தாரர் சொத்துக்களுக்கு உரிமம் கோரலாமா? 'மாநாடு' சர்ச்சை குறித்து பாரதிராஜா கேள்வி!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் விவகாரம் குறித்து சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் நீதிமன்றம் சென்றார் என்பதும் இதுகுறித்து திரையுலகில் பெரும்

இரண்டு பிரபல நடிகைகளுக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

இரண்டு பிரபல நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இவங்க வேறலேவல்… நடந்தே அலுவலகத்திற்கு வந்த பெண் கலெக்டர்!

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாட்டை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் அனைவரும் வாகனங்களைத் தவிர்த்து

ஒமைக்ரான் வைரஸ் தோற்றத்திற்கு எச்ஐவி காரணமா? பகீர் தகவல்!

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் ஆல்பா, பீட்டா, டெல்டா வரிசையில் தற்போது ஒமைக்ரான்