'சென்னை 28 II' என் கதை போலவே உள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Tuesday,December 27 2016]

வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சென்னை 28 II' திரைப்படம், நாட்டில் ரூபாய் நோட்டு பற்றாக்குறை உச்சத்தில் இருந்தபோது வெளிவந்த படம். ஆயினும் இந்த படம் நல்ல வசூலை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரும், சமீபத்தில் மிகச்சிறந்த வீரர் என்று ஐசிசியால் அறிவிக்கப்பட்ட வீரருமான அஸ்வின் ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

"என்ன ஒரு அற்புதமான படம் சென்னை 28 II'. என்னுடைய வாழ்க்கையை திரையில் பார்ப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. உண்மையிலேயே நானும் அந்த படத்தின் ஒரு கேரக்டராகவே இருந்தது போல் உணர்ந்தேன்'' என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபு 'சென்னை 28 II' படத்தின் இறுதியில் இதன் மூன்றாம் பாகமும் வெளிவரும் என்பது போல்தான் முடித்திருந்தார். எனவே 3ஆம் பாகத்தில் அவர் அஸ்வினை நடிக்க வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.