விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதிஹாசன்!

  • IndiaGlitz, [Thursday,October 31 2019]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’தெறி’ இந்தப் படம்தான் விஜய்-அட்லீ இணைந்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது என்பது அனைவரும் தெரிந்ததே. அதாவது 75 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 150 கோடி வரை வசூல் செய்து இரு மடங்கு லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்தது என்பது குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடந்து வந்த நிலையில் தற்போது ரவிதேஜா நடிப்பில் இந்த படம் உருவாகவுள்ளது. ரவிதேஜாவின் 66 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் சமந்தா கேரக்டரில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது .

மேலும் இந்த படத்தில் கோபிசந்த் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி எமிஜாக்சன் கேரக்டரில் நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

வரும் டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தை அடுத்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

சுஜித் மீட்புப்பணிக்கு ஆனா செலவு எத்தனை கோடி? அதிர்ச்சி தகவல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த சுஜித் என்ற 2 வயது சிறுவன் அக்டோபர் 25-ஆம் தேதி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில்,

விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்!

ஒவ்வொரு ஆண்டும் சுமார் எட்டு  முதல் பத்து திரைப்படங்களில் நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்கள் நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

ரஜினியை திடீரென சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியல் களத்தில் குதிக்க உள்ள நிலையில் அவரை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து வருகின்றனர் 

ரஜினி-கமல் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி குறித்த முக்கிய தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் வரும் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படுவதை அடுத்தும், திரையுலகில் கமல்ஹாசன் 60 ஆண்டுகள் பணிபுரிந்ததை அடுத்தும் நவம்பர் 7 முதல் 9 வரை

பெற்றோர்களின் அலட்சியத்தால் மேலும் ஒரு குழந்தை பலி!

ஆழ்துளை கிணற்றை மூடாமல் அலட்சியமாக வைத்திருந்ததால் சுஜித் என்ற இரண்டு வயது சிறுவனின் மரணம், டிவி பார்த்து கொண்டிருந்த நேரத்தில் தூத்துகுடியில்