18 வயது இளைஞனின் நிறுவனத்தில் 50% முதலீடு செய்த ரத்தன் டாட்டா

18 வயது இளைஞர் ஒருவர் ஆரம்பித்த பார்மா நிறுவனத்தில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா தனது சொந்த பணத்தை முதலீடு செய்துள்ளார்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அர்ஜுன் தேஷ்பந்தே என்ற மும்பையைச் சேர்ந்த 18 வயது இளைஞர் பார்மா பிசினஸ் ஒன்றை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் இவர் தயாரிக்கும் ஜெனரிக் மருந்துகள் மொத்த விற்பனை கடைகளுக்கு விற்பனை செய்யாமல் நேரடியாக சில்லரை விற்பனை கடைகளுக்கு விற்பனை செய்தார். மும்பை, புனே, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள சில்லரை கடைகளுக்கு நேரடியாக இந்நிறுவனத்தின் மருந்துகள் 16 முதல் 20 சதவீதம் மட்டுமே லாபம் வைத்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் 10 முதல் 20% லாபம் பார்க்கும் மொத்த வியாபாரிகளின் சதவிகித குறைந்ததால் சில்லரை கடைக்காரர்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தொழில் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்ட பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா இந்நிறுவனத்தில் 50 சதவீதம் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முதலீடு டாடா குழுமத்தில் இருந்து முதலீடு செய்யவில்லை என்பதும் டாடா தனது சொந்தப் பணத்தில் பர்சனலாக முதலீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இன்னும் ஒருசில ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் உள்பட பல மாநிலங்களில் இந்நிறுவனத்தின் கிளைகள் தொடங்கவும் அர்ஜூன் தேஷ்பந்தே திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

படுக்கையறையில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட மீராமிதுன்: வைரல் வீடியோ

பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான மீராமிதுன் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கவர்ச்சியான வீடியோக்களை வெளியிடுவதும், அவரது மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நெட்டிசன்கள்

டாஸ்மாக்கை அடுத்து கோவில்களையும் திறக்க அரசு அதிரடி முடிவு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் மத்திய அரசும் மாநில அரசுகளும் ஊரடங்கு உத்தரவில் சிலர் தளர்வுகளை

பிறந்த குழந்தைக்கு X Æ A-12 எனப் பெயர் சூட்டிய தந்தை!!! எப்படி உச்சரிப்பது விழிப்பிதுங்கும் நெட்டிசன்கள்???

பிரபல SpaceX நிறுவனத்தின் நிர்வாகியான எலோன் மஸ்க் தனக்கும், தனது தோழியும் பிரபல பாடகியுமான கிரையம்ஸ் க்கும் மே 5 ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு ஒரு விசித்திரமான குறியீட்டு பெயரை வைத்திருக்கிறார்.

இந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் சுமார் 3000 பேர்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் சுமார் 1000 பேர்கள் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர்கள்

கொரோனா ஏப்ரல் மாதம் முதல் நாளொன்றுக்கு 80 ஆயிரம் அதிகரிக்கிறது!!! WHO அதிர்ச்சி தகவல்!!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.