கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட ஆஸ்கார் நாயகன்: வைரல் புகைப்படம்!

ஆஸ்கார் விருதை வாங்கிய திரைப்பட கலைஞர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ஆஸ்கார் விருது வாங்கியவர்களில் ஒருவரான ரசூல் பூக்குட்டி அவர்கள் மிகச்சிறந்த சவுண்ட் இன்ஜினியர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பல திரைப்படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:

எங்கள் விஞ்ஞான சமூகத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கண்ணுக்கு தெரியாத சிறிய வைரஸை வெல்வதற்கு அவர்கள் தங்களுடைய தீவிர முயற்சியினால் எட்டே மாதங்களில் தடுப்பூசியை கொடுத்துள்ளார்கள். இந்த தடுப்பூசியை நான் இன்று எடுத்துக்கொண்டேன். எங்களுக்கு முன்னோக்கி செல்லும் பாதையைக் காட்டிய தடுப்பூசி கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள், தொழிலாளர்கள், அறிஞர்கள், மருத்துவர்கள் ஆகிய அனைவருக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ரசூல் பூக்குட்டியின் இந்த டுவிட்டும், புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய தமிழ் நடிகர்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன

சென்று வா.. செந்நிறத் தோழனே: எஸ்பி ஜனநாதன் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்!

பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவர் கவலைகிடமாக இருப்பதாக வெளிவந்த செய்தியால்

குக் வித் கோமாளி: எலிமினேட் ஆன பவித்ராவின் உருக்கமான டுவீட்!

இன்றைய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ரா எலிமினேட் செய்யப்பட்டார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டரில் உருக்கமான டுவிட்

பிரசாந்தின் 'அந்தகன்' படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை!

பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'அந்தாதூன்' திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமான 'அந்தகன்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே

திமுகவுக்கு கதை தேவையென்றால் நான் தருகிறேன்: கமல்ஹாசன்

இந்தியா டுடே என்ற ஊடகம் நடத்தும் கான்க்ளேவ் என்ற நிகழ்ச்சியில் பல அரசியல்வாதிகள் கடந்த இரண்டு நாட்களாக கலந்து கொண்டு கேள்விகளுக்கு சுவராசியமான பதில்களை தந்து கொண்டிருக்கிறார்கள்