நமக்கு நாளை இருக்குமா என்பது தெரியாது? விபத்தில் சிக்கிய ராஷ்மிகா தத்துவ கருத்து..!

  • IndiaGlitz, [Tuesday,September 10 2024]

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் ’நமக்கு நாளை என்பது இருக்குமா என்றே தெரியாது, எனவே நம்மை நாம் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவ கருத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பதும், பாலிவுட்டில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இந்திய அளவில் அவரது மார்க்கெட் உச்சத்திற்கு சென்று உள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, சில நாட்களாக எந்த ஒரு பதிவும் செய்யாத நிலையில் தற்போது அவருடைய புதிய பதிவில் தான் ஒரு சின்ன விபத்தில் சிக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பேன், ஆனால் சில மாதங்களாக சுறுசுறுப்பு இல்லாததற்கு காரணம் எனக்கு ஏற்பட்ட ஒரு சிறிய விபத்து தான். தற்போது நான் குணம் அடைந்து மருத்துவர்கள் சொன்னபடி ஓய்வெடுத்து வருகிறேன்.

நான் இப்போது குணமாகிவிட்டேன், மீண்டும் நான் சுறுசுறுப்பாக மாறும் கட்டத்தில் இருக்கிறேன், என்னுடைய செயல்பாடுகளை சிறப்பாக கையாள்வதில் நான் கவனமாக இருக்கிறேன் வாழ்க்கையில் உங்களை நீங்கள் கவனித்துக் கொள்வதற்கு முன்னுரிமை கொடுங்கள் .

வாழ்க்கை ஒரே ஒரு முறை தான் கிடைக்கும், நமக்கு நாளை என்பது கிடைக்குமா என்றே தெரியாது, எனவே தினமும் மகிழ்ச்சியை மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

More News

ஜெயம் ரவியின் பிறந்த நாளில் 'பிரதர்' படத்தின் முக்கிய அறிவிப்பு.. ரிலீஸ் எப்போது?

நடிகர் ஜெயம் ரவி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'பிரதர்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ள நிலையில்

கீர்த்தி சுரேஷ் நடித்த  'ரகுதாத்தா'.. ZEE5 ஓடிடியில் ரிலீசாகும் தேதி அறிவிப்பு..!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ,குடும்ப பொழுதுபோக்கு சித்திரமான 'ரகுதாத்தா' செப்டம்பர் 13 முதல் ZEE5 இல் டிஜிட்டல் பிரீமியராகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.!

விஜய்யின் 'கோட்' படத்தின் 4 நாட்கள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான நிலையில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் வசூல் நிலவரத்தை தயாரிப்பு நிறுவன

ஒரே நாளில் மோதும் கமல் - அஜித் படங்கள்? த்ரிஷா ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷம்..!

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் கமல்ஹாசன் மற்றும் அஜித் படங்கள் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'வேட்டையன்' படத்தை அடுத்து மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய உண்மைக்கதை.. ஞானவேல் தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முடித்துள்ள 'வேட்டையன்' என்ற திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும்