விமான பயணத்தின் போது திடீரென ஏற்பட்ட ஆபத்து.. உயிர் தப்பியது இப்படித்தான்: ராஷ்மிகாவின் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Sunday,February 18 2024]

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விமான பயணம் செய்த போது திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் அப்போது தான் செய்த செயல் குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது பிஸியான நடிகையாக உள்ளார் என்பதும் அவர் மூன்று தெலுங்கு மற்றும் ஒரு இந்தி படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் தொழில் கோளாறு ஏற்பட்டதாகவும் அப்போது விமானி மிகவும் சாதுரியமாக செயல்பட்டு மீண்டும் மும்பைக்கு விமானத்தை திருப்பி அவசர அவசரமாக தரையிறக்கினார் என்றும் அதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டதாகவும் பயணிகள் அனைவரும் காயம் இன்றி உயிர் தப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விமானம் அவசர அவசரமாக தரையிறங்கிய போது சீட்டின் மீது காலை வைத்தபடி நானும் எனது அருகில் உட்கார்ந்த நடிகை ஷ்ரத்தாவும் பயத்துடன் இருந்தோம் என்றும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம் என்றும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.