0.3 மில்லி செகண்டில் காதலில் விழுந்தேன்: அன்புக்குரியவரை அறிமுகம் செய்த ராஷ்மிகா மந்தனா!

கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் பிரபல நாயகி என்பதும் தற்போது அவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராமில் சுமார் 18 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ்களும் லட்சக்கணக்கில் லைக்ஸ்களும் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த ஒரு பதிவில் 0.3 மில்லி செகண்டில் காதலில் விழுந்தேன் என்று பதிவு செய்துள்ளார். அவரது பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: நண்பர்களே.. பல குழப்பங்களுக்கு நடுவே, எனது மகிழ்ச்சியான ஒன்றை கண்டடைந்தேன். இது முழு நேரமும் என்னை உற்சாகமாக வைத்துள்ளது. என் செல்லத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இவள் பெயர் ஆரா.. 3 வினாடிகளில் காதலில் விழுந்தேன் என்று கூறுவார்கள். ஆனால் இவள் என் இதயத்தை 0.3 மில்லி செகண்டில் உருக்கிவிட்டாள். இதனை உங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்’ என்று ராஷ்மிகா மந்தனா தனது செல்ல நாய்க்குட்டியை குறிப்பிட்டுள்ளார்.

செல்ல நாய்க்குட்டியை ராஷ்மிகா கொஞ்சி கொண்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


 

More News

'தி பேமிலி மேன்-2' தொடரை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டா? அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சமந்தா, ப்ரியாமணி உள்பட பலர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'தி பேமிலி மேன்-2' என்ற வெப்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் இந்த

ஜெ. வழக்கின் முக்கிய அதிகாரி ஜி.சம்மந்தம் உயிரிழந்தார்....!

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் சொத்துக்குவிப்பு வழக்க&#

எனது அடுத்த படத்தில் 'பயணம்' முக்கிய பங்கு வகிக்கும்: கிருத்திகா உதயநிதி

'வணக்கம் சென்னை' மற்றும் 'காளி' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி சமீபத்தில் தனது மூன்றாவது படம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்

வாடகை ஆட்டோ, கார்களில் பயணிக்க இ-பதிவு... பெறுவது எப்படி?

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை குறைந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டள்ளது.

லைவில் தற்கொலை முயற்சி… தக்க சமயத்தில் காப்பாற்றிய ஃபேஸ்புக் நிறுவனம்!

டெல்லியில் வசித்து வந்த 39 வயதான நபர் ஒருவர் ஃபேஸ்புக் லைவிலேயே தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.