பெரும் தொகையில் பண மோசடியா? மேனேஜரை நீக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா!

  • IndiaGlitz, [Monday,June 19 2023]

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ராஷ்மிகா மந்தனா திடீரென்று தன்னுடைய நீண்டநாள் மேலாளரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் பண மோசடியில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி 'கீதா கோவிந்தம்' திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த இவர் நேஷனல் கிரஷ் என்றே இளம் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில் தமிழில் 'சுல்தான்' போன்ற ஒருசில திரைப்படத்தில் நடித்திருந்த அவர் சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து 'வாரிசு' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து 'புஷ்பா 2' திரைப்படத்திலும் பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் இணைந்து 'அனிமல்' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்ட நாட்களாக மேனேஜராக வேலைப்பார்த்து வந்தவர் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பல்வேறு சந்தர்பங்களில் நடைபெற்ற இந்த மோசடியை நடிகை ராஷ்மிகா அறிந்து, உடனேயே அவரை வேலையை விட்டு நீக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் 80 லட்சம் ரூபாய் அளவிற்கு பண மோசடி நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய அளவில் பிரபலமாகி இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்தவரே இப்படி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தகவல் தற்போது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

More News

ரஜினி-லோகேஷ் படத்தில் ரூ.1200 கோடி வசூல் பட ஹீரோ இணைகிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் 1200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்த

குழந்தை முதல் குமரி வரை.. தந்தை மடியில் நடிகை கீர்த்தி சுரேஷ்..! க்யூட் புகைப்படங்கள்..!

நேற்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் தங்களது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும்

கல்விக்கு ஊக்க கண் திறந்தது போல் இதையும் செய்யுங்கள்: விஜய்க்கு தேசிய விருது பெற்ற இயக்குனர் வேண்டுகோள்

தளபதி விஜய் நேற்று முன் தினம் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார் என்பதும் இந்த விழா 12 மணி நேரத்துக்கு

விடிய விடிய கொட்டும் மழை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை..

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டிய காரணத்தினால் இன்று தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள்

5 தமிழ் நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை.. பட்டியலில் யார் யார்?

தயாரிப்பாளர் சங்க கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் ஐந்து நடிகர்களுக்கு தடை விதிக்கப்படும் என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது  என வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.