close
Choose your channels

முன்னாள் ஆந்திர CMஉடன் சிவாஜி… “அண்ணாத்த“ பட நடிகர் பகிர்ந்த அரிய புகைப்படம்!

Saturday, August 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் ஜெகபதி பாபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் “அண்ணாத்த“ திரைப்படத்தில் இணைந்து இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் ஜெகபதி பாபு தற்போது ஒரு வரலாற்று புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் திரு.என்.ஜனார்த்தன்ரெட்டி, நடிகர் ஜெகபதி பாபுவின் அப்பா திரு வி.பி.ராஜேந்திர பிரசாத் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே ஒரு அரிய பதிவாக மதிக்கப்பட்டு வருகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் ஜெகபதி பாபு தமிழ், கன்னடம், மலையாள சினிமாக்களிலும் சிறந்த நடிகராக அறியப்படுகிறார். இவருடைய தந்தை வி.பி.ராஜேந்திர பிரசாத் அந்தக் காலத்திலேயே தெலுங்கில் சிறந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருந்துள்ளார். இவர் தமிழ் திரைப்படங்களையும் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது தந்தை வி.பி.ராஜேந்திர பிரசாத் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் திரு. என்.ஜனார்த்தன் ரெட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் நடிகர் ஜெகபதி பாபு பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் மறைந்த நடிகர் திலகம் நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் மேஜர் சுந்தர் ராஜ் போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்தப் புகைப்படம் குறித்து கருத்துப் பகிர்ந்துள்ள நடிகர் ஜெகபதி பாபு, அந்தக் கால தெலுங்கு சினிமாக்கள் பெரும்பாலும் சென்னையிலேயே எடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் ஏதேட்சையாக ஆந்திராவில் எடுக்கப்பட்ட ஒரு சினிமா சூட்டிங்கிற்கு முன்னாள் முதல்வர் என்.ஜனார்த்தன் ரெட்டி வந்துள்ளார் எனக்கூறி அரிய புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

ஆந்திர காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்த என்.ஜனார்த்தன் ரெட்டி கடந்த 1990-92 வரை முதலமைச்சராக இருந்தவர். மேலும 3 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். கூடவே தன்னுடைய சகாப்தத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருடைய மனைவி ராஜலட்சுமியின் அமைச்சராக இருந்தவர். இந்தத் தம்பதிகளுக்கு அந்தக் காலத்திலேயே நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் இருந்தது.

இந்நிலையில் முன்னாள் ஆந்திர அமைச்சர் என்.ஜனார்த்தனரெட்டி, மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தயாரிப்பாளர், இயக்குநர் வி.பி.ராஜேந்திரபிரசாந்த் ஆகியோர் இடம்பெற்ற அரிய புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.