கையூட்டு வாங்கிய அரசு அதிகாரி....! வைரலாகும் வீடியோ....!

  • IndiaGlitz, [Tuesday,May 25 2021]

நிலத்தை பதிவு செய்ய அரசு அதிகாரி ரமேஷ் என்பவர் லஞ்சமாக ரூ.20 ஆயிரம் கேட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகாவில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சார்பதிவாளர் ரமேஷ் என்பவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கலவை தாலுக்காவில், மாம்பாக்கம் என்ற ஊரில் வசித்து வருபவர் தான் ஆதிமூலம்(60). அங்குள்ள தனது 2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்வராஜ், முனிசாமி, ரகுநாதன் என்ற மூன்று மகன்கள் உள்ள நிலையில், தனது பூர்வீக சொத்தான 10 சென்ட் அளவுடைய வீட்டை மகன்களுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனால் நிலத்தை பிரித்துக்கொடுக்க, பத்திரம் தயார் செய்ய கடந்த ஏப்ரல்-31 ஆம் தேதி, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். நிலத்தை பார்வையிட்டு, அளந்து கொடுக்க சார்பதிவாளர் ரமேஷ் இடைத்தரகர் மூலம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து முன் பணமாக ரூ.10 ஆயிரத்தை இடைத்தரகர் வேலு மூலம் வாங்கியுள்ளார். 5 நாட்களிலே நிலத்தை அளந்து, பத்திரத்தை தயார் செய்து வைத்துள்ளார் ரமேஷ். மீதி பணத்தைசெலுத்திவிட்டு, பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஆதிமூலத்திடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்தில், மீதி பணத்தை இடைத்தரகர் வேலு வாங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆயிரம் சட்டங்கள் வந்தாலும், ஆன்லைன் முறைகள் கொண்டுவரப்பட்டாலும், கிராமப்புறங்களை இது போன்று சில அதிகாரிகள் கையூட்டு வாங்கும் நிலை இன்னும் மாறவே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருந்துவருகிறது.

 

More News

22 நாட்கள் கொரோனா பாதிப்புக்கு பின் மீண்டு வந்தேன்: பிரபல தமிழ் நடிகர்

தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றனர் என்பதும் பெரும்பாலானோர் அதில் குணமாகினர் என்பதும் ஒரு சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள்

உசந்துவிட்ட மனிதநேயம்… சாலையோர மக்களின் பசியை ஆற்றும் பெண் ஆட்டோ ஓட்டுநர்!

நெல்லையில் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்துவருபவர் தேவி. இவர் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது

WHO பட்டியலில் இடம்பெறாத கோவேக்சின்… என்ன செய்ய போகிறது பாரத் பயோடெக்?

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அடிப்படையில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விக்னேஷ் சிவனுடன் அவ்வளவு நெருக்கமானவரா பிக்பாஸ் சம்யுக்தா? வைரல் புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவருக்கு ஆரம்பத்தில் ரசிகர்களின் வரவேற்பு நல்லபடியாக இருந்தாலும் திடீரென ஆரியை பகைத்து கொண்டதால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்

பிறந்தநாளன்று நடிகர் கவுண்டமணி பதிவிட்ட டுவீட்...! முக்கிய பிரச்சனை பத்திதான்....!

சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற சம்பவம் குறித்து நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, முக்கிய டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்