கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகைக்கு இரட்டை குழந்தையா?

பிரபல நடிகை ஆலியா பட் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் அவருக்கு இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை ஆலியா பட் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஆலியா பட் தற்போது கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில்தான் ரன்பிர் கபூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, ‘ஒரு உண்மை மற்றும் ஒரு பொய் சொல்ல வேண்டும் என தொகுப்பாளினி கேள்வி கேட்க அதற்கு ’நாங்கள் இரட்டை குழந்தையை எதிர்பார்க்கிறோம்’ என்றும் ’ஒரு பெரிய சரித்திரக் கதையில் நடிக்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

இதில் எது பொய்? எது உண்மை என்பதை நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள் என ரன்பீர் கபூர் கூறிய நிலையில் ஆலியா பட்டுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பது தான் உண்மை என்று ரசிகர்களால் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.