பட வாய்ப்புக்காக படுக்கை குறித்து ரம்யா நம்பீசன்

  • IndiaGlitz, [Thursday,April 19 2018]

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி இந்த விஷயத்தில் ஒரு பெரும் புயலையே கிளப்பிவிட்டார். இந்த புயலில் பல பெரிய மனிதர்களின் மானம் பறந்து போய்விட்டது

இந்த நிலையில் இதுகுறித்து பிரபல தமிழ் நடிகை ரம்யா நம்பீசன் கூறியபோது, 'பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் சினிமாவில் இல்லை என்று கூற முடியாது. அதிர்ஷ்டவசமாக இந்த பிரச்சனையை நான் சந்திக்கவில்லை என்றாலும் என்னுடைய தோழிகள் மூலம் இதை கேள்விப்பட்டிருக்கின்றேன். இதற்காக வெட்கப்படுகிறேன்.

மேலும் படுக்கைக்கு அழைப்பது என்பது சினிமாத்துறையில் மட்டுமில்லை, அனைத்து துறைகளிலும் உள்ளது. இதனை எதிர்த்து பெண்கள் குரல் கொடுக்க வேண்டும். பெண்கள் இதுகுறித்து தைரியமாக வெளியே பேசினால்தான் குற்றம் செய்பவர்களுக்கு பயம் ஏற்படும்' என்று கூறியுள்ளார்.

More News

வெளியானது நிர்மலாதேவியின் புதிய வாட்ஸ் அப் வீடியோ

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

வேலைநிறுத்த முடிவுக்கு பின்னர் நடக்கும் முதல் திரைப்பட விழா

மார்ச் மாதம் 1ஆம் தேதியில் இருந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்திய வேலைநிறுத்தம் 47 நாட்களாக தொடர்ந்து, கடந்த செவ்வாய் அன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவுக்கு வந்தது.

சிஎஸ்கே போட்டியை பார்க்க புனேவுக்கு சென்ற சென்னை ரசிகர்கள்

சென்னையில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடந்தபோது ஒருசில அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகை சேர்ந்த சிலரும் நடத்திய போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தல அஜித்தின் சாதனையை முறியடித்த சூப்பர் ஸ்டார் ரஜினி

'காலா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தல அஜித்தின் விவேகம் சாதனையை ரஜினியின் 'காலா' திரைப்படம் முறியடித்துள்ளது.

ரஜினியின் 'காலா' ரிலீஸ் எப்போது? விஷால் தகவல்

நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .