அந்த நபரை சும்மா  விடக்கூடாது.. பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த ரம்யா கிருஷ்ணன்..!

  • IndiaGlitz, [Sunday,October 08 2023]

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அந்த நபரை சும்மா விடக்கூடாது என நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆவேசமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி என்பவர் நடிகை ரோஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ரோஜா ஆபாச படத்தில் நடித்துள்ளார் என்றும் அந்த வீடியோவை வெளியிடுவேன் என்றும் அவர் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஏற்கனவே அமைச்சர் ரோஜாவுக்கு நடிகை ராதிகா உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் ’இந்தியா என்ற தாயை பெண்ணாக மதித்து நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் அதே நாட்டில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கிறது. ரோஜாவை மோசமாக விமர்சனம் செய்த அந்த நபரை சும்மா விடக்கூடாது, மன்னிக்கக் கூடாது, நான் ரோஜாவுக்கு துணை நிற்கிறேன்.

இது குறித்து பிரதமர் மோடி அவர்கள் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.