ஐதராபாத் பெண் டாக்டர் கொலையை படமாக்கும் பிரபல இயக்குனர்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹைதராபாத் பெண் டாக்டர் ஒருவர் நான்கு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்னர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் நாடாளுமன்றத்திலும் ஒலித்தது. குற்றவாளிகளை நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும் என பெண் எம்பிக்கள் ஆவேசமாக பேசினர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வந்த நிலையில் குற்றவாளிகள் நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர். இந்த பரபரப்பான சம்பவத்தை திரைப்படமாக்க பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது.

ஐதராபாத் திஷா'வின் கொடூரமான கொலை, நிர்பயா பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு நடந்த கொடூரமான கொலை ஆகும். நான் இயக்கவுள்ள இந்த படம் பாலியல் வன்கொடுமையாளர்கள் குறித்தும், அவர்கள் ஏன் திஷாவை கொன்றார்கள் என்பது குறித்தும் விரிவாக விளக்கும்.

பாலியல் குற்றவாளிகள் முந்தைய பாலியல் குற்றங்களில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முயல்கின்றார்களே தவிர திருந்துவதாக தெரியவில்லை. இதுகுறித்த எனது படம், எல்லோருக்கும் பயங்கரமான பாடத்தை உணர்த்தும் என்று கூறியுள்ளார்.

More News

தனுஷின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

 தனுஷ் நடித்த அசுரன் மட்டும் பட்டாஸ் ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்

பாஜகவில் இணைந்த அஜித்-விஜய் பட இயக்குனர்

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியில் கடந்த சில மாதங்களாக திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் இணைந்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இன்னும் அணையாத காட்டுத்தீ.. ஆஸ்திரேலியாவில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை..!

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவை நெருங்கும் காட்டுத்தீயால் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு  அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் வெற்று வார்த்தைகள்.. செயல்படுத்தும் விதமாக ஒரு திட்டம் கூட இல்லை..! பட்ஜெட்டை விமர்சித்த ராகுல் காந்தி.

நிதியமைச்சரின் இந்த உரை முற்றிலும் கார்ப்பரேட் நலன்களுக்காக இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீசிய தந்தை: பெரும் பரபரப்பு

காதல் திருமணம் செய்து கர்ப்பிணியான சொந்த மகள் மீது அவரது தந்தையே ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது