ரசிகர்களுக்கு 6 மொழிகளில் நன்றி தெரிவித்த ரம்பா: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Saturday,June 26 2021]

கடந்த 90களில் தமிழ் உள்பட தென்னிந்திய திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு மொழிகளில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழில் ’உழவன்’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை ரம்பா அறிமுகமானாலும் ’உள்ளத்தை அள்ளித்தா’ என்ற திரைப்படம்தான் ரம்பாவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. அதன்பின்னர் அவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சரத்குமார் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார் என்பது சுமார் பத்து வருடங்களில் அவர் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தற்போது ரம்பாவுக்கு 2 மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பாவுக்கு தற்போது 2 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர். இதனை அடுத்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் என ஆறு மொழிகளில் நன்றி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவில் அவர் மேலும் கூறியதாவது: திரைத்துறையில் எனது வாழ்க்கையைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று தலைமுறை நெருங்கிவிட்டது. இந்த ஆண்டுகளில், உங்கள் அன்பும் ஆதரவும் குறைந்து வருவதை நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. நான் திரையில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் எப்போதும் உங்களுடன் எப்போதும் நெருக்கமாக இருக்கிறேன். எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உங்கள் அனைவருக்கும் எனது நன்றி’ என தெரிவித்துள்ளார்.

More News

அஜித் படத்தில் நடித்திருக்கின்றாரா 'பிரேமம்' அல்போன்ஸ் புத்திரன்?

அஜித் நடித்த 'தீனா' படத்தை அவரது ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அஜித்தை முதன் முதலாக ஆக்ஷன் ஹீரோவாக்கியது இந்த படம்தான் என்பதும், அது மட்டுமின்றி ரசிகர்கள் அஜித்தை 'தல' என்று அன்போடு

கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள்..! சாதனா, ஜிபி. முத்து மீது காவல் நிலையத்தில் புகார்...!

இணையத்தில் பிரபலமாக இருப்பவர்களான டிக்டாக் சாதனா, ஜிபி முத்து, சூர்யா, சிக்கா மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உதயநிதியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடி வழக்கு!

உதயநிதி ஸ்டாலினின் வெற்றிக்கு எதிராக அதே தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார்.

அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: இணையதளங்களில் வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ரவுசு செய்யும் ரவுடி பேபி சூர்யா....! ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்....!

சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக, ரவுடி பேபி சூர்யா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.