close
Choose your channels

தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட ரம்பா மகள்.. தமிழ் சினிமா ஹீரோயின் ஆவாரா?

Wednesday, October 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்பா தனது குடும்ப புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படத்தில் ரம்பாவின் தோளுக்கு மேல் வளர்ந்த அவரது மகளை பார்த்து, எதிர்கால தமிழ் சினிமா ஹீரோயின் ஆக இருக்குமா என்ற கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. அவர் 2010ஆம் ஆண்டில் கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரகுமார் பத்மகுமாரை திருமணம் செய்து கொண்டு, கிட்டத்தட்ட திரை உலகத்தில் இருந்து விலகினார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்; இதில் மூத்த மகள் தற்போது நன்றாக வளர்ந்து, பெரிய பெண்ணாகி விட்டார்.

இந்த நிலையில், ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலங்கைக்கு சென்ற போது எடுத்த குடும்ப புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், ரம்பாவை விட அதிகமாக வளர்ந்துள்ள அவரது மகள் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "தமிழ் சினிமா ஹீரோயின் ஆக வருவாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். ரம்பாவின் மகள் நடிகையாக அறிமுகமாவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment