முதல்முறையாக நண்பர்கள், உறவினர்கள் இல்லாத கொண்டாட்டம்: ரம்பா வெளியிட்ட வீடியோ
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எந்தவித கொண்டாட்டமும் இல்லாத நிலையே உள்ளது. இந்த நிலையில் கடந்த 2000ம் ஆண்டுகளில் இந்திய திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் 10வது திருமண நாளை தனது வீட்டில் மிக எளிமையாக கொண்டாடியுள்ளார்
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘முதல் முதலாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லாமல் கொண்டாடப்படும் இந்த திருமண நாள் கொண்டாட்டம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த வருடம் நாங்கள் கேக் ஆர்டர் செய்யாமல் வீட்டிலேயே கேக் செய்தோம். ஆர்டர் செய்யும் கேக்கை விட மிகவும் சுவையாக இருந்தது. எங்களுடைய 10 வருட காதல் கதை இந்த கேக்கின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்தது என்றும், மேலும் எனது மகள்கள் சர்ப்ரைசாக கொடுத்த பரிசு எங்களை ஆசைப்படுத்தியது என்று ரம்பா தெரிவித்துள்ளார்
நடிகை ரம்பா கடந்த 2010ஆம் ஆண்டு இந்திரகுமார் என்ற கனடா நாட்டின் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.