இறந்து விடுவேன் என பயமாக உள்ளது...! வீடியோ வெளியிட்டு கதறும் பெண்...!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண், இறந்து விடுவேன் என பயமாக உள்ளது என்று வெளியிட்ட வீடியோ காண்போர் மனதை பதைபதைக்க செய்கின்றது.

ராமநாதபுரம் மாவட்டத்திலும், பிற நகரங்களை போலவே நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற மக்கள் குவிந்து வருகிறார்கள். பலரும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆக்சிஜன் தேவைப்படும் பட்சத்தில், அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கும் படுக்கைகள் நிரம்பியுள்ளதால், ஊழியர்கள் நோயாளிகளை திருப்பி அனுப்புகிறார்கள்.

இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் பெண் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களாக நெஞ்சுவலியாக உள்ளது. ஊசி போடுவதற்கு கூட மருத்துவர்கள் யாரும் வரவில்லை. ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் நான் இறந்துவிடுவேன் என்று பயமாக உள்ளது என்று கதறி அழுதவாறு வீடியோ என்றாய் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காண்போர் மனதை பதைபதைக்க செய்கின்றது. கடந்த சில வாரங்களாகவே மருத்துவமனைகளில் ஆக்சிஜன்தேவை , படுக்கை வசதி தேவை என பொதுமக்கள் வீடியோ பதிவிட்டு வரும் சம்பவங்கள் தமிழகத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

பட்டுக்குட்டி, செல்லக்குட்டி: 'குக் வித் கோமாளி' புகழ் கூறிய பிறந்த நாள் வாழ்த்து யாருக்கு தெரியுமா?

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'குக்'கள், கோமாளிகள்,

சேர்ந்து வாழ்வதைவிட பிரிந்து வாழ்வதில் சந்தோஷம்: அப்பா-அம்மா விவாகரத்து குறித்து ஸ்ருதிஹாசன்!

தன்னுடைய அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாழ்வதை விட பிரிந்து வாழும் போதுதான் சந்தோசமாக இருந்தார்கள் என நடிகை சுருதிஹாசன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும்: சமந்தா தெரிவித்த விருப்பம்!

திருமணத்திற்கு பின்னரும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை என்றால் அது சமந்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னை போலவே நீங்களும் நடந்துக்கோங்க: நடிகை கீர்த்தி சுரேஷின் வைரல் வீடியோ!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் கருப்பு பூஞ்சை நோய் வருமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

இந்தியா முழுக்கவே தற்போது கருப்பு பூஞ்சை தொற்று குறித்த பீதி ஏற்பட்டு உள்ளது.