ரஜினியை கடத்த திட்டமா?

  • IndiaGlitz, [Tuesday,May 17 2016]
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பாராட்டும் கண்டனங்களையும் பெற்று வருவது வாடிக்கையே.

அந்த வகையில் தற்போது ரஜினி குறித்த ஒரு கருத்தை அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பன் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை கடத்தி 108 நாட்கள் வரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது அனைவரும் அறிந்ததே. பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் வீரப்பன் உண்மையில் ரஜினியைத்தான் கடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதற்கு பதில் ராஜ்குமாரை கடத்தியதாகவும் ராம்கோபால் வர்மா, அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரி விஜயகுமார் தலைமையிலான தனிப்படை வீரப்பனை சுட்டுகொன்றது என்பது குறிப்பிடத்தக்கது. வீரப்பன் குறித்து ராம்கோபால் வர்மா இயக்கிய 'வீரப்பன்' என்ற திரைப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ராம்கோபால் வர்மாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இராஜபாளையம் பெண்களின் அழகை ரசித்தேன். விஷால்

விஷால், ஸ்ரீதிவ்யா, நடிப்பில் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ள 'மருது' திரைப்படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்புகள் இராஜபாளையத்தில்தான் நடைபெற்றது...

பிளஸ் 2 மாணவர்களுக்கு நடிகர் சதீஷ் அறிவுரை

இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்து கொண்டு வருகின்றனர்...

'தெறி'யை அடுத்து பஸ்ஸில் பிடிபட்ட 'மனிதன்'

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் சட்டவிரோதமாக பேருந்தில் ஒளிப்பரப்பாகியதை விஜய் ரசிகர் ஒருவர்...

சூர்யா எழுதிய மன்னிப்பு கடிதம்

நடிகர் சூர்யாவின் '24' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பொதுமக்களுக்கு அவர் ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதியுள்ளார்...

சூர்யாவின் '24'. அமெரிக்கா-கனடா வசூல் விபரங்கள்

சூர்யா நடிப்பில் கடந்த 6ஆம் தேதி வெளியான '24' திரைப்படம் தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் நல்ல வரவேற்பை...