close
Choose your channels

சூர்யா-கார்த்தி பட நாயகியின் தியான புகைப்படம் வைரல்!

Thursday, September 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண் விஜய் நடித்த ’தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ரகுல் பிரீத்திசிங் அதன் பின்னர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ’ஸ்பைடர்’ என்ற படத்தில் நடித்தார். இருப்பினும் அவர் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் சூர்யா நடித்த ’என்ஜிகே’ ஆகிய திரைப்படங்களால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் இருந்த ரகுல் பிரீத்திசிங் தனது சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் தியானம் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மனதை அமைதியாக்குங்கள், ஆன்மா உங்களுடன் பேசும். தியானம் உங்களுடைய உள் பிரபஞ்சத்துடன் இணைக்கும்’ என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகை ரகுல்ப்ரீத்தி சிங், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’, கமலஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment