ராகுல் ப்ரித்திசிங் விடுத்த எச்சரிக்கை எந்த இயக்குனருக்கு?

  • IndiaGlitz, [Saturday,February 17 2018]

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை ராகுல் ப்ரித்திசிங், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், கார்த்தியுடன் அவர் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது.

இந்த நிலையில் தற்போது சூர்யா-செல்வராகவன் படம், கார்த்தியின் படம் மற்றும் சிவகார்த்திகேயன் படம் என தமிழில் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந்த நிலையில் ராகுல் ப்ரித்திசிங் நடிக்கும் ஒருசில தமிழ், மற்றும் இந்தி படங்களில் இன்னொரு பிரபல நாயகிகள் ஒப்பந்தமாகி வருவதாகவும், ராகுல் இரண்டாவது ஹீரோயினியாக தள்ளப்படுவதாகவும் வதந்திகள் வெளிவந்தது.

இதனை கடுமையாக மறுத்துள்ள ராகுல் ப்ரித்திசிங், நான் இப்போதும் முதல்தர நாயகியாகத்தான் நடித்து வருகிறேன். ஒருவேளை என்னுடைய கேரக்டரை எந்த இயக்குனராவது டம்மியாக்கினால் அந்த படத்தில் இருந்து விலகிவிடுவேன்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை எந்த இயக்குனருக்கு என்பது இனிமேல் தான் தெரியவரும்

More News

ஆற்றில் உள்ளது தீர்ப்பில் வரவில்லை: காவிரி குறித்து கஸ்தூரி எழுதிய கவிதை

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை கஸ்தூரி அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

பிப்ரவரி 21ஆம் தேதி கமல்ஹாசனின் முழு சுற்றுப்பயண விபரங்கள்:

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியை தொடங்கி முதல் அரசியல் பொதுக்கூட்டத்தையும் நடத்தவுள்ள நிலையில் அன்றைய தினம் அவரது சுற்றுப்பயண முழுவிபரங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

சிவகுமாரின் மகாபார சொற்பொழிவு எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது தெரியுமா?

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தியின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான சிவகுமார் என்பவர் நடிகர் மட்டுமின்றி சிறந்த ஓவியர் என்பது அனைவரும் அறிந்ததே.

சந்தானம் தனது பாணியை மாற்றி கொள்வது நல்லது: காமெடி நடிகர் ஜார்ஜ்

கடந்த பல வருடங்களாக காமெடி மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் ஜார்ஜ். குறிப்பாக தெய்வத்திருமகள், ஆம்பள, கலகலப்பு, கலகலப்பு 2 உள்பட பல படங்களில் அவரது சிறப்பான நடிப்பு வெளிப்பட்டுள்ளது.

கமல்-நல்லக்கண்ணு சந்திப்பில் நடந்தது என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்கள் இன்று கமல்ஹாசனின் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து இருதரப்பினர்களும் மரியாதை நிமித்த சந்திப்பு என்று தெரிவித்தனர்.