ரகுல் ப்ரித்திசிங்கின் வருங்கால கணவர் இவர்தான்: சகோதரர் வெளியிட்ட தகவல்!

  • IndiaGlitz, [Thursday,October 13 2022]

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் வருங்கால கணவர் இவர்தான் என ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் நடித்த ரகுல் ப்ரீத்தி சிங் அதன் பிறகு சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’ என்ற படத்தில் நடித்தார். அவர் தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ மற்றும் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரகுல் ப்ரீத்தி சிங் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கூறியபோது ’எந்த ஒரு இனிமையான காதல் உறவுக்கும் திருமணம் தான் முடிவு என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அனேகமாக ரகுல் ப்ரீத்தி சிங் - ஜாக்கி பக்னானி திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ரகுல் விரைவில் அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து ரகுல் ப்ரீத் சிங்கின் திருமணம் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' 3வது சிங்கிள் பாடல்.. எழுதி, பாடியது இந்த பிரபலமா?

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்தது என்பதும் இந்த படம் சென்சார்

வெங்கட்பிரபு-நாகசைதன்யா படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை: வில்லன் யார் தெரியுமா?

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் 'NC22' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அமைதிக்கு முன் ஒரு புயல்: அஜித்தை வேற லெவலில் வர்ணித்த விக்னேஷ் சிவன்!

அஜித்தின் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன் 'அமைதிக்கு முன் ஒரு புயல்' என வர்ணித்துள்ளார். 

இரட்டை குழந்தைகள் விவகாரம்: விக்கி- நயனிடம் விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! 

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் குறித்து விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உன் கால்ல விழுந்து உன்னை அம்மான்னு சொல்லட்டா.. முற்றும் ஜிபி முத்து - தனலட்சுமி விவகாரம்!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து ஆரம்பம் முதல் கடைசி வரை ஜாலியாக காமெடி பண்ணுவார் என்று நினைத்து கொண்டிருந்த நிலையில் மூன்றாவது நாளே அவர் கதறி அழுக